Sunday, February 28, 2016

•சிறப்புமுகாம்களை மூடும்படி தேர்தல் முழக்கமாக்குவோம்!

•சிறப்புமுகாம்களை மூடும்படி தேர்தல் முழக்கமாக்குவோம்!
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் யாவும் வரவுள்ள தேர்தலை முன்னிட்டு தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
எந்த ஆரசியல்கட்சியும் தமது தேர்தல் அறிக்கையில் சிறப்பு முகாம்களை மூடுவது குறித்து எதுவும் தெரிவிக்காதது ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் கட்சிகள்கூட தான் ஆட்சிக்கு வந்தால் சிறப்புமுகாம்களை மூடுவோம் என தெரிவிக்காதது கவலையளிக்கிறது.
1990 ல் கலைஞர் கருணாநிதியினால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை.
சிறப்புமுகாம்களை மூடும்படி வைகோ, ராமதாஸ், திருமாவளவன் மற்றும் சீமான் எல்லோரும் போராடியிருக்கின்றார்கள்.
மனிதவுரிமை அமைப்புகள் மற்றும் பல புரட்சி அமைப்புகள் கூட சிறப்புமகாமை மூடும்படி வலியுறுத்தியுள்ளன.
ஆனால் சிறையைவிடக் கொடிய முகாமாக இருக்கும் சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை.
அதில் அடைத்து வைக்கப்ட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இது தேர்தல் காலம். எனவே ஈழத் தமிழர் மீது அன்பும் அக்கறையும் உள்ளவர்கள் தமிழக கட்சிகளிடம் இது குறித்து வலியுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வாக்கு கேட்டு வரும் கட்சிகளிடம் சிறப்புமுகாமை மூடும்படி கோர வேண்டும் என தமிழக உறவுகளிடம் ஈழத் தமிழர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
சிறப்புமுகாம் மூடப்படவேண்டும் என்பதை தேர்தல் முழக்கமாக்குவோம்.
ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இதனை இடம்பெறச் செய்வோம்.

No comments:

Post a Comment