Sunday, February 28, 2016

தமிழ் மாணவன் ஒருவேளை ஜனாதிபதியானாலும் தமிழ் கைதிகள் ஒருபோதும் விடுதலை பெற முடியாது!

• தமிழ் மாணவன் ஒருவேளை ஜனாதிபதியானாலும்
தமிழ் கைதிகள் ஒருபோதும் விடுதலை பெற முடியாது!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சாரணர் விழாவில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரி அவர்கள், யாழ் மாணவன் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக முடியும் என்று தெரிவித்தார்.
யாழ்மாணவன் ஒருவேளை ஜனாதிபதியானாலும் தமிழ்கைதிகள் ஒருபோதும் விடுதலை அடைமுடியாது போல் உள்ளது.
ஏனெனில் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி 15 தமிழ் அரசியல்கைதிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளனர்.
அவர்கள் தாங்கள் இந்த உண்ணாவிரதத்தில் மரணமுற்றால் தமது உடல்களை யாழ் பல்கலைக்கழக மருத்தவபீடத்திடம் ஒப்படைக்கும்படியும், அரசியல்வாதிகளிடம் எக்காரணம்கொண்டும் ஒப்படைக்க வேண்டாம் என்றும் கோரியுள்ளனர்.
தமிழர் ஒருவர் மகாண முதலமைச்சராக இருக்கிறார்
தமிழர் ஒருவர் எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்
தமிழா சிலர்; அமைச்சர்களாக இருக்கிறார்கள்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
தமிழ் பிரதேசபை உறுப்பினர்கள்கூட இருக்கிறார்கள்
இத்தனை தமிழ் பிரதிநிதிகள் இருந்தும் இவர்கள் யாரிடமும் தமது உடல்களை ஒப்படைக்க வேண்டாம் என்று கைதிகள் கூறுகின்றார்கள் எனில் இதைவிட கேவலம் இவர்களுக்கு என்ன இருக்கு?
தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் என்று அறிந்த அடுத்த நிமிடமே எமது "வாழ்நாள் வீரர்" சம்பந்தர் அய்யா இந்தியா எஸ்கேப் ஆகிவிடுவார்.
அவரின் வாரிசு "சின்ன கதிர்காமர்" சுமந்திரன் அவர்கள் பேச்சுவாhத்தை செய்வதாக கூறி போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பார்.
நமது "வெடிகுண்டு முருகேசன்" மாவையார் வழக்கம்போல் போராட்டம் வெடிக்கும் என்று அறிக்கைவிட்டிட்டு தூங்கப் போய்விடுவார்.
நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரியோ இது எதுவுமே தமக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி "தமிழன் எதிர்கால ஜனாதிபதியாகலாம்" என்று கதைவிடுவார்.
புதிதாக பதவியேற்ற ஆளுநரோ கலப்பு திருமணம் செய்தால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்று இன்னொரு கதை சொல்வார்.
பாவம் கைதிகள் மட்டுமல்ல, இவர்களை வோட்டு போட்டு தெரிவு செய்ய தமிழ் மக்களும்தான்..

No comments:

Post a Comment