Sunday, February 28, 2016

•ஸ்டாலின் அவர்களும் ஈழத் தமிழரும்

•ஸ்டாலின் அவர்களும் ஈழத் தமிழரும்
வருங்கால தி.மு.க தலைவரும்
வருங்கால தமிழக முதலமைச்சரும்
அதையடுத்து, வருங்கால உலகத்தமிழின தலைவருமான
ஸ்டாலின் அவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று கூறியுள்ளார்.
அந்த அனைத்து பிரச்சனைகளிலும் கீழ்வரும் விடயங்களும் அடங்குமா என்பதை யாராவது அவரிடம் கேட்டு சொல்லுங்களேன் பிளீஸ்!
•கலைஞரால் தொடங்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் மூடப்படுமா?
•அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?
•தமிழகத்தில் 33 வருடங்களுக்கு மேலாக இருந்துவரும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுமா?
•ஈழ அகதிகள் தமிழகத்தில் உயர்கல்வி பெற அனுமதி வழங்கப்படுமா?
•ஈழ அகதிகள் கியூபிரிவு பொலிஸ் தொந்தரவு இன்றி சுதந்திரமாக திரிய அனுமதிக்கப்படுமா?
•அகதிகள் ஆட்டோ ஓட்டிப் பிழைக்கவாவது லைசென்ஸ் எடுக்க அனுமதி அளிக்கப்படுமா?
இந்த கேள்விகள் எழுவதற்குரிய காரணம், நமக்குநாமே திட்டத்தின்கீழ் பல்லாயிரம் மைல்கள் நடந்து மக்கள் பிரச்சனைகளை கேட்டதாக கூறும் ஸ்டாலின் அவர்கள், வழியில் இருந்த ஒரு அகதி முகாமுக்குகூட செல்லவில்லை. அவர்களின் பிரச்சனைகளை கேட்கவில்லை.
அகதிகளுக்கு வாக்குரிமை இல்லாதபடியால்தான் ஸ்டாலின் அவர்கள் பிரச்சனைகளை கேட்கவில்லை?
அகதிகளை தமிழர்களாக நினைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களையும் மனிதர்களாகாவது மதித்திருக்கலாம் அல்லவா!
கடந்தகால தவறுகளுக்கு தான் மன்னிப்பு கோருவதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் அவர்களே!
கலைஞர் சிறப்புமுகாமை ஆரம்பித்து அதில் அகதிகளை அடைத்தமைக்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை,
தமிழகத்தை நம்பிவந்த அகதிகளை கண்டுகொள்ளாமல் இருந்தமைக்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை,
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழ்மக்கள் அழிவதை காக்க தவறியமைக்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை,
மருத்துவ சிகிச்சைக்காக வந்த பிரபாகரன் தாயாரை வயதான பெண்மணி என்றும் பாராமல் திருப்பி அனுப்பியமைக்காக மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை,
கலைஞர் தத்து எடுத்த அகதி சிறுவனை சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக அடித்துக் கொன்றீர்களே அதற்காவது மன்னிப்பு கேளுங்கள்.

No comments:

Post a Comment