Sunday, February 28, 2016

•கலைஞரின் மிஸ்ட்கால்

•கலைஞரின் மிஸ்ட்கால்
கலைஞரின் மிஸ்ட்கால் திட்டத்தை கேள்விப்பட்ட ஒரு அப்பாவி ஈழத் தமிழன் அவருக்கு போன் செய்தான். அவன் ஆவலுடன் கேட்ட கேள்விகளும் அதற்கு கலைஞர் அளித்த தெளிவான பதில்களும்.
அப்பாவி ஈழத் தமிழன்- உலகத் தமிழினத் தலைவர் அவர்களே! நாங்கள் ஜயோ என்று கத்தி அலறியது உங்கள் காதில் கேட்கவில்லையா? எங்களை ஏன் காப்பாற்றவில்லை?
கலைஞர்- என் உடன் பிறப்பே! என்னை கடலிலே தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக வந்து உனக்கு உதவுவேன்.
அப்பாவி ஈழத் தமிழன்- நீங்கள் அரம்பித்த சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை. இனியாவது அந்த கொடிய சிறப்புமுகாம்களை மூடி அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்வீர்களா?
கலைஞர்- டெசோ மாநாடு நடத்துவேன். சாவதற்குள் தமிழீழம் காண்பேன் என அதில் உரையாற்றுவேன். இது போதாதா?
அப்பாவி ஈழத் தமிழன்- ஈழத்தில் தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சியுடன் நீங்கள் கூட்டு சேர்ந்திருப்பது துரோகம் இல்லையா கலைஞர் அவர்களே!
கலைஞர்- அதுதான் மாபெரும் 3 மணி நேர உண்ணாவிரதம் மரீனா கடற்கரையில்; நடத்தினேனே. அது போதாதா?
அப்பாவி ஈழத் தமிழன்- மருத்துவ சிகிச்சைக்காக வந்த பிரபாகரன் தாயாரை வயதான பெண் என்றும் பாராமல் திருப்பி அனுப்பினீர்களே. இது நியாயமா கலைஞர் அவர்களே?
கலைஞர்- மௌனம்.
அப்பாவி ஈழத் தமிழன்- மணி என்ற ஒரு ஈழஅகதி சிறுவனை தத்து எடுத்து வளர்த்தீர்களே. இப்போது அந்த சிறுவன் எங்கே? சொத்துக்கு பங்கு கேட்டுவிடுவான் என அஞ்சி ஸ்டாலினால் அந்த அகதி சிறுவன் அநியாயமாக கொல்லப்பட்டுவிட்டான் என்று அறிகிறோமே. அது உண்மையா கலைஞர் அவர்களே?
கலைஞர்- ரெலிபோனை துண்டித்துவிட்டு அருகில் இருந்த துரைமுருகனிடம் "ஏம்பா இந்த மிஸ்டுகோல் திட்டத்தை உடனே கான்சல் பண்ண சொல்லய்யா ஸ்டாலினிடம் என்றார்.
குறிப்பு- இது ஒரு கற்பனை உரையாடல் என்றாலும்கூட இதுதான் உண்மையும் கூட.

No comments:

Post a Comment