Friday, September 27, 2019

செய்தி – 72 வயதாகிறது. திகார் சிறையில் அடைத்து விடாதீர்கள் - சிதம்பரம் கெஞ்சல்.

செய்தி – 72 வயதாகிறது. திகார் சிறையில் அடைத்து விடாதீர்கள் - சிதம்பரம் கெஞ்சல்.
தான் பணத்தை மட்டுமல்ல தன் உடலையும் பல தடவை சிதம்பரத்திற்கு லஞ்சமாக வழங்கினேன் என்று பெண் ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஆனால் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் சிதம்பரம் தன்னை சிறையில் அடைக்க வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சியுள்ளார்.
தன்னை சிறையில் அடைக்க வேண்டாம் என்பதற்கு காரணமாக தனக்கு 72 வயதாகிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் இதே சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது சாய்பாபா என்ற மனிதவுரிமைவாதியை சிறையில் அடைத்திருந்தார்.
சாய்பாபாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தபோதும் அவரை விடுதலை செய்யாது பல பொய் வழக்ககளை போட்டு சிறையில் அடைத்து வைத்தவர் இந்த சிதம்பரம்.
இத்தனைக்கும் சாய்பாபா டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் மட்டுமல்ல அவர் ஒரு உடல் ஊனமுற்றவர்.
மற்றவர்களின் உதவியின்றி நடமாட முடியாத சாய்பாபாவை இரக்கமின்றி சிறையில் அடைத்த சிதம்பரம் இன்று தனக்கு இருக்கம் காட்டுமாறு கோருகிறார்.
சரி. இதைப் படிக்கும் சிலர் சாய்பாபா ஒரு நக்சலைட் ஆதரவாளர். எனவே அவரை அடைத்தது சரி என்று நினைக்க கூடும்.
அப்படி நினைப்பவர்களுக்கு இன்னொருவரின் கதையை கூறுகிறேன். அந்த இன்னொருவர் வைகோ. அவரும் சிதம்பரம் போன்று வயதான அரசியல்வாதிதான்.
அண்மையில் அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குவதாக நீதிபதி தெரிவித்தபோது தனக்கு வயதாகிறது என்று அவர் கெஞ்சவில்லை.
மாறாக, தான் குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு ஒருபோதும் கோரவில்லை. எனவே தனக்கு அதிக பட்ச தண்டனையை வழங்குமாறு கோரினார்.
உண்மைதான். வைகோ மீது யார் எத்தனை விமர்சனங்களை முன்வைத்தாலும் அவரது சிறைவாழ்க்கை குறித்து எவருமே விமர்சிக்க முடியாது.
பொதுவாக அரசியல்வாதிகள் சிறைக்கு வந்தால் அவர்களுக்கு தனி அறை வழங்கப்படும். அல்லது சிறை மருத்தவமனையிலாவது வைக்கப்படுவார்கள்.
ஆனால் வைகோ எப்போது சிறைவைக்கப்பட்டாலும் சிறையில் உள்ள மற்ற சிறைவாசிகளுடனே தங்குவார்.
சிறைவாசிகளுக்க வழங்கப்படும் உணவையே மற்ற சிறைவாசிகளுடன் சேர்ந்து உண்ணுவார்.
தன்னைப் பார்வையிட வருவோர் தரும் பழம் பிஸ்கட்டுகளைக்கூட சிறையில் உள்ளவர்களிடம் கொடுத்துவிடுவார்.
சிறைவாசிகளுடன் சேர்ந்து கைப்பந்தாட்டம்கூட விளையாடுவார். அதுமட்டுமல்ல சிறைவாசிகள் சினிமாப்படம் பார்ப்பதற்கும் வழி சமைப்பார்.
இதனால் வைகோ சிறைக்கு கொண்டு வரப்படுகின்றார் என்றால் சிறையில் இருக்கும் அத்தனை சிறைவாசிகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.
நான் மதுரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்த சிறைவாசிகளே இதனை என்னிடம் கூறினார்கள்.

No comments:

Post a Comment