Friday, September 27, 2019

மீண்டும் தமிழ் இனம் எழுந்து நிற்கும்

•மீண்டும் தமிழ் இனம் எழுந்து நிற்கும்
என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அடுத்த சந்ததியினர்!
புலத்தில் இருக்கும் வயதான நாலுபேர்தான் கத்திக் கொண்டிருக்கிறார்கள்
அடுத்த சந்ததியினர் போராட்டம் குறித்து அக்கறை கொள்ளமாட்டார்கள்
இவ்வாறு சொல்பவர்களுக்கு தகுந்த பதிலை அடுத்த சந்தியினரான இளையவர்கள் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதில் ஆச்சரியம் இல்லை. எனெனில் என்னதான் வசதியான வாழ்வு கிடைத்தாலும் தங்களின் வேர்கள் குறித்த தேடல்களை நடத்த வேண்டிய தேவை இந்த இளையவர்களுக்கு ஏற்படுகிறது.
தமது வேர்களை தேடி அறியும் இந்த இளையவர்கள் தமக்கான அங்கீகாரத்திற்காக குரல் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
அதனால் அவர்கள் உலகத்திடம் உலகத்திற்கு புரியும் மொழியில் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.
இது மீண்டும் தமிழ் இனம் எழுந்து நிற்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment