Friday, September 27, 2019

• நீதிமன்றமாவது - மயிராவது?

• நீதிமன்றமாவது - மயிராவது?
நீதிமன்ற தீர்ப்பையும் மீறி புத்த பிக்குவின் உடல் பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை அமுல் படுத்த வேண்டிய பொலிசார் தீர்ப்புக்கு எதிராக செயற்பட்ட பிக்குகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.
இதன் மூலம் நீதிமன்றத்தையோ அல்லது அதன் தீர்ப்பையோ மயிருக்குகூட மதிக்க தயாரில்லை என்பதை சிங்கள புத்த பிக்குகள் காட்டியுள்ளனர்.
இந்திய ஆர்எஸ்.எஸ் அமைப்பின் 11 பிரிவுகள் இலங்கையில் இயங்குவதாக சுப்பிரமணியம்சுவாமி கூறுகிறார்.
ஆனால் இதில் ஒரு அமைப்புகூட இந்த பிக்குகளின் அடாவடித்தனத்தை இதுவரை கண்டிக்கவில்லை.
இலங்கையில் 4 இந்திய தூதுவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்கூட இந்துக் கோயில் வளாகத்தில் பிக்குவின் உடல் தகனம் செய்தது தவறு என்று கண்டிக்கவில்லை.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
முதலாவது, இந்துக்களுக்காக இந்திய அரசு குரல் கொடுக்கும் என்பது பொய்.
இரண்டாவது – தமிழன் தான் இந்து என்று கூறினாலும் இந்திய அரசு தமிழனுக்கு உதவி செய்யாது.

No comments:

Post a Comment