Friday, September 27, 2019

•ரஸ்சியாவுக்கு கப்பல் விடும் மோடி அரசு தலைமன்னாருக்கு கப்பல் விட தயங்குவது ஏன்?

•ரஸ்சியாவுக்கு கப்பல் விடும் மோடி அரசு
தலைமன்னாருக்கு கப்பல் விட தயங்குவது ஏன்?
ரஸ்சியாவுக்கு விஜயம் சென்றிருக்கும் பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவுக்கும் ரஸ்சியாவுக்கும் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதேவேளை ஈழத் தமிழர் பகுதிக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் மற்றும் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று 2015ல் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டதை நினைவூட்ட விரும்புகிறோம்.
அதன்படி அடுத்த மாதம் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவைகள் அரம்பிக்கப்படவுள்ளன.
ஆனால் இந்த விமான சேவைகள் தமிழ்நாட்டின் எந்த விமான நிலையங்களுக்கும் இல்லை. மாறாக பெங்களு+ர் ஜதராபாத் போன்ற இடங்களுக்கே உண்டு.
ஆக இந்த சேவைகள் ஈழத்தமிழ் மக்களின் நலனுக்காகவும் ஆரம்பிக்கப்படவில்லை. தமிழக தமிழ் மக்களின் நலனுக்காகவும் ஆரம்பிக்கப்படவில்லை என்று புரிகிறது.
சரி. பரவாயில்லை. அதேவேளை தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்திய அரசு ஏன் தயங்குகிறது?
இரண்டு துறைமுகங்களும் தயாராக இருக்கின்றன. தேவையான கப்பலும் தயாராக இருக்கிறது. இந்த சேவையை நடத்த நிறுவனமும் தயாராக இருக்கிறது. ஆனால் இந்திய அரசின் “அனுமதி” என்ற ஒற்றைச் சொல்லுக்காகவே யாவும் காத்துக் கிடக்கின்றது.
இந்த கப்பல் சேவை நடக்குமாயின்
(1) ஈழஅகதிகள் இலகுவாக தாயகம் திரும்ப முடியும்
(2) அகதிகள் அதிகளவு பொருட்களை தம்முடன் எடுத்து வரமுடியும்.
(3) சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்ல முடியும்.
(4) இதனால் தலைமன்னார் ராமேஸ்வரத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
(5) தமிழகத்து நூல்கள் மற்றும் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும்.
(6) வெறும் இரண்டு மணி நேர பயணம் மட்டுமே இது. மிகவும் மலிவான பயணமும் கூட.
யுத்தம் நடந்த காலத்தில் இலங்கை அரசு இந்த சேவையை நிறுத்தி வைத்தது. ஆனால் இப்போது இலங்கை அரசு அனுமதி வழங்கிவிட்டது.
ஆனால் ஈழத் தமிழருக்கு உதவுவேன் என்று கூறும் இந்திய அரசு அனுமதி வழங்க தயங்குகிறது.
இந்திய அரசிடம் இதைக் கேட்க வேண்டிய எமது தலைவர்களோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள்.
என்ன செய்வது?
குறிப்பு – கீழே சம்பந்தர் ஐயாவின் அழ்ந்த உறக்கத்தில் இருக்கும் 3 படங்கள் தந்துள்ளேன். இதில் உங்களுக்கு பிடித்த உறக்கம் எது ? ஏன்? என்று கூறுங்கள் நண்பர்களே! ( இது ஒரு ரிலாக்ஸ் விளையாட்டு)

No comments:

Post a Comment