Friday, September 27, 2019

ஒரு துப்பாக்கி அகிம்சை போராட்டம் நடத்தியது

ஒரு துப்பாக்கி அகிம்சை போராட்டம் நடத்தியது
அகிம்சை வழியில் ஈழத் தமிழர்கள்
ஒரு ம - - ம் பெற முடியாது என்பதை
அது தெளிவாகவே கூறிச் சென்றது
ஆனாலும்
தேர்தல் பாதையில் செல்லும் தலைவர்கள்
வருடம் தவறாமல் வந்து விளக்கேற்றி அஞ்சலி செய்கிறார்கள்
கூடவே போட்டோவும் எடுத்துச் செல்கிறார்கள்
அடுத்த தேர்தலில் போஸ்டர் அடிக்க உதவும் என்று
யாராவது வருவார்கள்
தன்னை மீண்டும் தூக்குவார்கள் என்று
நம்பியிருந்தது அந்த துப்பாக்கி
ஆனால் இன்றைய தலைவர்களின் கூத்துகளைப் பார்த்து
உண்மையாகவே அது இப்போது மரணித்துவிட்டது.
பாவம் துப்பாக்கி
தூரத்தில்
ஓ! மரணித்த வீரனே உன் ஆயுதத்தை தா பாடல் ஒலிக்கிறது.

No comments:

Post a Comment