Friday, September 27, 2019

விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் வரலாம்

விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் வரலாம்
ஆனால் சம்பந்தர் ஐயாவிடமிருந்து வருமா?
இஸ்ரோ விஞ்hனிகள் பல மணி நேரம் முயற்சி செய்து விக்ரம் லேண்டருக்கு சிக்னல் அனுப்பினார்கள்.
இஸ்ரோ தலைவர் சிவன் - ஹலோ ஹலோ .... ....
விக்ரம் லேண்டரில் இருந்து எந்த பதில் சிக்னலும் வரவில்லை
இஸ்ரோ சிவன் - ஹலோ விக்ரம் லேண்டர் எங்கு இருக்கிறாய்?
இப்பவும் விக்ரம் லேண்டரில் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
இஸ்ரோ சிவன் சலிப்புடன் - ஹலோ விக்ரம் லேண்டர் உயிரோடு இருக்கிறாயா?
இதற்கும் விக்ரம் லேண்டரில் இருந்து பதில் வரவில்லை
இறுதியாக இஸ்ரோ சிவன் - ஈழத் தமிழருக்கு சம்பந்தர் ஐயா தீர்வு பெற்றுக் கொடுத்து விட்டார் என்று கூறிப்பார்த்தார்.
உடனே விக்ரம் லேண்டரில் இருந்து பதில் சிக்னல் வந்தது
விக்ரம் லேண்டர் - போடா ம – ரு !
உடனே இஸ்ரோ சிவன் மகிழ்ச்சி அடைந்து பிரதமர் மோடிக்கு செய்தி அனுப்பினார் “ சேர்! விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைத்து விட்டது “.
இது வெறும் பகிடிதான். ஆனால் உண்மை என்னவென்றால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சம்பந்தர் ஐயாவிடமிருந்து சிக்னல் எதுவும் இதுவரை தமிழ் மக்களுக்கு வரவில்லை.
வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமை வழங்குவதாக ஜேவிபி வேட்பாளர் கூறுகிறார்.
ஜக்கிய இலங்கைக்குள் சமஸ்டி வழங்குவதாக யுஎன்பி வேட்பாளர் சஜித் பிரோமதாசா கூறுகிறார்.
தான் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்திற்குள் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கோத்தபாயா ராஜபக்ச கூறுகிறார்.
ஆனால் இவை தொடர்பாக தமிழ் மக்களின் தலைவர் என்று கூறப்படும் சம்பந்தர் ஐயா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒருவேளை இந்திய அரசிடமிருந்து எந்த சிக்னலும் சம்பந்தர் ஐயாவுக்கு இதுவரை வரவில்லையோ?

No comments:

Post a Comment