Friday, September 27, 2019

முதலில் மாட்டு சாணியை பிடித்து வைத்தால் அதில் பிள்ளையார் இருப்பார் என்றார்கள்.

முதலில் மாட்டு சாணியை பிடித்து வைத்தால் அதில் பிள்ளையார் இருப்பார் என்றார்கள்.
இப்போது மாட்டு மூத்திரத்தில் மருத்துவம் இருப்பதாக கூறுகிறார்கள்.
மாட்டு மூத்திரம் குடித்தால் கான்சர் குணமாகும் என்று இந்திய சுகாதார அமைச்சரே கூறுகிறார்.
விரைவில் மாட்டு மூத்திரம் மருந்தாக அறிமுகப்படுத்தப்படும் என்று வேற கூறுகிறார்.
ஆனால் உலகில் இந்தியாவில் மட்டுமே மாட்டு பால் சாமி சிலைக்கு ஊற்றப்படுகிறது. நெய் சாமிக்கு எரிக்கப்படுகிறது. மூத்திரம் குடிக்கப்படுகிறது.
இப்போது எமது கவலை இந்தியாவில் ஏன் இந்த நிலை என்று அல்ல. மாறாக இனி அடுத்த வருடம் யாழ் இந்திய தூதர் ஈழத் தமிழனையும் மாட்டு மூத்திரம் குடிக்க வைக்கப் போறாரே என்றுதான்.
இதை எப்படி தடுப்பது?
குறிப்பு – நமது வட மாகாணசபை அவைத் தலைவர் யாழ் இந்திய தூதருடன் அருந்துவது மாட்டு மூத்திரமாக இருக்குமோ என யாரும் தவறாக நினைத்துவிட வேண்டாம்.

No comments:

Post a Comment