Friday, September 27, 2019

•இவர்கள் ஏன் நடக்கிறார்கள்?

•இவர்கள் ஏன் நடக்கிறார்கள்?
இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் நண்பர்களுடன் பாபர்கியூ சாப்பிட்டு மகிழ்ந்திருக்கலாம். அல்லது
இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் கொலிடேக்கு நல்லூர் திருவிழாவுக்கு சென்று வந்திருக்கலாம். அல்லது
இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் குடுமபத்தினருடனும் பிள்ளைகளுடனும் நேரத்தை செலவு செய்திருக்கலாம். அல்லது
இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்திருக்கலாம்.
ஆனால் இவர்கள் இதையெல்லாம் விட்டிட்டு தமிழ் மக்களுக்கு நடந்த இன அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவா செல்கிறார்கள்.
உண்மையில் ஜ.நா வில் கேட்பது என்றால் இவர்கள் காரிலோ அல்லது ரயில் மூலமோ ஜெனிவா சென்றிருக்கலாம்.
ஆனால் இவர்களோ பிரான்சில் இருந்து நடந்து ஜெனிவா செல்கிறார்கள். இன்று 5வது நாளாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
வழியெங்கும் தமிழ் மக்களுக்கு எற்பட்ட இன அழிப்பை மக்களுக்கு கூறிச் செல்கிறார்கள். இதன் மூலம் மக்கள் ஆதரவை திரட்டுகிறார்கள்.
மக்களின் ஆதரவின் மூலமே தமிழருக்கான நீதியைப் பெற முடியும் என்பதை உணர்ந்து செயற்படுகிறார்கள்.
சரியான பாதையில்தாhன் நடக்கிறார்கள். எனவே அவர்கள் தமக்குரிய இலக்கை மக்கள் ஆதரவுடன் அடைவார்கள்.

No comments:

Post a Comment