Tuesday, December 19, 2023

இன்று மனிதவுரிமை தினமாம்? (10.12.2023)

•இன்று மனிதவுரிமை தினமாம்? (10.12.2023) போர் முடிந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன. போர் முடிந்த பின் சரணடைந்த இவர்களுக்கு என்ன நடந்தது என்றே இன்று வரை தெரியவில்லை. இறந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதா என்றும் தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 7 வருடங்களாக போராட்டம் நடத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பல கட்சிகள் இருக்கின்றன. பல தலைவர்கள்கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்களால்கூட இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 11 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மனிதவுரிமை தினத்திலாவது சர்வதேசம் ஈழத் தமிழரை கவனத்தில் கொள்ளுமா?

No comments:

Post a Comment