Tuesday, December 19, 2023

மக்களுடன் சேர்ந்து உண்ணுங்கள்.

மக்களுடன் சேர்ந்து உண்ணுங்கள். மக்களுடன் சேர்ந்து உறங்குங்கள். மக்களுடன் சேர்ந்து போராடுங்கள் என்றார் மாசே துங். இதன் அர்த்தம் மக்களுக்காக போராடுபவர்கள் மக்களுடன் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்பதே. அதாவது தண்ணீருக்குள் இருக்கும் மீனைப் போல் ஒரு போராளி இருக்க வேண்டும். எப்படி தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்தால் ஒரு மீன் வாழ முடியாதோ அதேபோன்று மக்களைவிட்டு அந்நியப்படுபவர்களால் மக்களுக்காக போராட முடியாது. நீருக்குள் இருக்கும் மீன் எப்போதும் நீரோட்டத்திற்கு எதிராக நீந்தும். அதேபோன்று மக்கள் மத்தியில் இருக்கும் போராளிகள் மக்களை அடிமைப்படுத்தும் தழைகளுக்கு எதிராக செயற்பட வேண்டும். ஒரு போராளியின் தலைமறைவு வாழ்க்கை என்பது மக்களுக்கு வெளிப்படையாகவும் அரசுக்கு ரகசியமாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்று தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறும் சிலரின் வாழ்க்கை மக்களுக்கு ரகசியமாகவும் அரசுக்கு வெளிப்படையாகவும் இருக்கிறது. உதாரணமாக மக்களுக்கு தலைமைதாங்கி வழி நடத்தப்போவதாக கூறும் பெண்மணி ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக யூ ரியூப்பில் உரையாற்றியுள்ளார். யூ ரியூப் உட்பட இண்டர்நெட் ஊடகம் எதிலும் பேக் ஐடியில் வந்தாலும் அவர்களின் முழு விபரங்களையும் அரசுகளால் பெற முடியும். அதாவது மக்களுக்காக போராடுவதாக கூறும் இவர்கள் அரசுக்கு வெளிப்டையாகவும் மக்களுக்கு இரகசியமாகவும் இருக்கின்றனர்

No comments:

Post a Comment