Tuesday, December 19, 2023

ஈழத்து குடுகுடுப்பைக்காரர்!

• ஈழத்து குடுகுடுப்பைக்காரர்! சுமந்திரன் - நல்ல காலம் பிறக்குது. தமிழருக்கு நல்ல காலம் பிறக்குது அப்பாவி தமிழன் - ஏன் சேர், சம்பந்தர் ஐயா செத்திட்டாரா? சுமந்திரன் - இல்லை. லண்டனில் இருந்து நம்ம GTF சுரேன் வந்திருக்கார். அப்பாவி தமிழன்; - ஓ! இவர்தானே லண்டனில சோனியா காந்தியை சந்தித்துவிட்டு “ அன்னை சோனியாவின் கண்களில் இரக்கத்தைக் கண்டேன்” என அறிக்கை விட்டவர். சுமந்திரன் - அது அப்ப. இப்ப ரணிலை சந்தித்து அவரின் செயற் திட்டத்தை பாராட்டியிருக்கிறார். கவனிக்கவில்லையா நீங்கள்? அப்பாவி தமிழன் - 11 தமிழ் இளைஞர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்த ரணிலின் செயற்திட்டத்தை பாராட்டியிருக்கிறாரா? சுமந்திரன் - என்ன இருந்தாலும் ஜனாதிபதி ரணிலை நாம் காப்பாற்ற வேண்டும் அல்லவா. அதற்காக இமயமலைப் பிரகடனம் செய்திருக்கிறார். எனவே தமிழருக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது. அப்பாவி தமிழன் - சேர் ! நல்லாட்சி அரசிலும் தீர்வு வரும். இல்லையேல் ராஜினாமா செய்வேன் என்றீர்கள். தீர்வும் வரவில்லை. ராஜனாமாவும் செய்யவில்லை. அது சரி, அந்த ராஜினாமா கடிதம் இப்பவும் சட்டைப் பொக்கற்றுக்குள்ள இருக்குதோ சேர்? சுமந்திரன் - இப்படி கேட்டா எப்படி? நான் தமிழரசுக்கட்சி தலைவராக வேண்டாமா? அப்பாவி தமிழன் - ஓ! உங்களுக்குத்தான் எப்பவும் நல்ல காலம் சேர்.

No comments:

Post a Comment