Tuesday, December 19, 2023

இதுவரை பல ஈழத் தமிழர் கலந்துகொண்டனர்.

இதுவரை பல ஈழத் தமிழர் கலந்துகொண்டனர். ஆனால் ஒருமுறைகூட பரிசை வென்றதில்லை அதற்கு பல காரணங்களை கூறினார்கள். ஆனால் இம்முறை அதையெல்லாம் உடைத்து பரிசை வென்றிருக்கிறார் கில்மிஷா. பரிசு பெற்ற பலர் இன்னமும் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பின்றி இருக்கின்றனர். ஆனால் பரிசு பெற முன்னரே பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் போட்டி முடியுமுன்னரே வாய்ப்பு வழங்கியுள்ளார். இன்னொரு இசையமைப்பாளர் எப்போது போட்டி முடியும் என காத்துக்கொண்டிருப்பதாக கூறினார். இந்தியாவில் இத்தகைய ஒரு பெருமையை ஈழத் தமிழர் ஒருவர் பெறுவது அதிசயம் எனில் அதைவிட அதிசயம் அதை அவர் இத்தனை சிறிய வயதில் சாதித்திருப்பது. அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment