Tuesday, December 19, 2023

எதிரியை சந்திப்பது,

எதிரியை சந்திப்பது, சந்திக்கும்போது கை குலுக்குவது தவறு இல்லை. ஆனால் எதிரியை பாராட்டுவது தவறு. மாவீரர்களை நினைவு கூர்ந்தமைக்காக கடந்த ஒரு வாரத்தில் 11 தமிழர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுகள் யாவும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரிலேயே நடைபெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே இதனை ஜனாதிபதியிடமே நேரில் கேட்டு அவரை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, நாட்டை கட்டி எழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டத்தை பாராட்டியிருக்கின்றனர். அத்துடன் அதற்கு தமது பங்களிப்பு வழங்கப்படும் என்றும் உலக தமிழர் பேரவையினர் தெரிவித்துள்ளனர். எதிரியை பாராட்டியதன் மூலம் இவர்கள் எதிரிக்கு சோரம் போய்விட்டனரோ என்ற சந்தேகத்தை தருகிறது. இதில் ஒருவர் சோனியா காந்தி லண்டன் வந்தபோது அவரை சந்தித்தவர். சந்தித்துவிட்டு “ அன்னை சோனியாவின் கண்களில் கண்ணீரைக் கண்டேன்” என்று அறிக்கை விட்டவர். புலிகளை வைத்து அமைப்பு ஆரம்பித்தவர்கள் இன்று புலிகள் இல்லை என்றவுடன் எதிரிகளை நாடி செல்கின்றனர். இது செத்த மாட்டில் இருந்து கழரும் உண்ணிகளை நினைவூட்டுகின்றது.

No comments:

Post a Comment