Tuesday, December 19, 2023

இது உலக தமிழ் பேரவை அல்ல இது உலக தமிழ் பேயரவை

•இது உலக தமிழ் பேரவை அல்ல இது உலக தமிழ் பேயரவை ( பேயர் - முட்டாள்) “நீ உன் நண்பர்களை கூறு. நான் உன்னைப் பற்றி கூறுகின்றேன்” என ஒரு பழமொழி உண்டு. மகிந்த ராஜபக்சாவை சந்தித்ததன் மூலம் தாம் யார் என்பதை உலக தமிழ் பேரவையினர் தமிழ் மக்களுக்கு இனங்காட்டியுள்ளனர். மகிந்த ராஜபக்சாவை அவரது சிங்கள மக்களே தூக்கி எறிந்துவிட்டனர். அவரும் அவருடைய குடும்பமும் மக்கள் முன் வரமுடியாமல் ஒளித்து திரிகின்றனர். அத்தகைய மகிந்த ராஜபக்சாவை சந்தித்து அவரது அரசியல் மீள் வருகைக்கு உதவியுள்ளனர் இவர்கள். பரவாயில்லை. மகிந்தவை சந்தித்தபோது அவர் கையில் ஒப்படைக்கப்பட்ட தமிழர் எங்கே என்பதையாவது கேட்டிருக்கலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் “இவர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்” என்று ஏன் கூறினார்கள் என்று இப்போது புரிகிறதா? அது சரி இந்த இமயமலைப் பிரகடனம் மக்களுக்கானதா அல்லது தலைவர்களுக்கானதா? மக்களுகானது என்றால் மக்களுக்குதானே முதலில் தெரியப்படுத்த வேண்டும். மக்கள் அங்கீகாரம் பெற வேண்டும்.

No comments:

Post a Comment