Tuesday, December 19, 2023

காரல் மார்க்ஸ் அவர்களின் இறுதி ஊர்வலத்தில்

காரல் மார்க்ஸ் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் முப்பது பேரே கலந்துகொண்டனர். ஆனால் இன்று அவரது கல்லறைக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். மன்னர்களின் கல்லறைகளுக்குகூட இந்தளவு பேர் வருவதில்லை. லண்டன் ஹைகேட் மயானத்தில் அவரது கல்லறை இருக்கிறது. 1960 களில் இந்த கல்லறைக்கு வெடி குண்டு வீசப்பட்டது. அதனால் சிறிது சேதமடைந்தது. காரல் மார்க்ஸ் தத்துவம் மட்டுமல்ல அவரது கல்லறைகூட முதலாளித்துவத்திற்கு அச்சத்தைக் கொடுக்கிறது. வாரிசுகள் யாரும் இல்லாததால் தற்போது ஒரு குழு இந்த கல்லறையை பராமரிக்கிறது. இந்த குழுவின் சார்பில் ஒரு பிரசுரம் அங்கு விநியோகிக்கப்படுகிறது. அதில் காரல் மாக்ஸ்க்கும் அவரது வீட்டு பணிப்பெண்ணிற்கும் இருந்த உறவால் ஒரு ஆண் குழந்தை பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த காதலர்களுக்கு உதாரணமாக மார்க்ஸ் மற்றும் ஜென்னி கூறப்படுகிறது. அப்படியிருக்கையில் மாக்ஸ் எப்படி தன் காதல் மனைவிக்கு துரோகம் இழைத்திருப்பார்? ஆதாரமற்ற இந்த செய்தி குறித்து நான் இக் குழு உட்பட பலருடன் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அது பற்றிய விபரம் இன்னொரு பதிவில் தருகிறேன். குறிப்பு – புலவர் அவர்களின் மகன் தோழர் சோழன் நம்பியார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இப் படம் பதிவு செய்துள்ளேன்.

No comments:

Post a Comment