Tuesday, December 19, 2023

இவர் தமிழச்சி தங்க பாண்டியன்.

இவர் தமிழச்சி தங்க பாண்டியன். திமுக எம்.பி. இவர் பிரபாகரனுடன் சேர்ந்து உணவு உண்ண விரும்புவதாகவும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் இவர் கூறிய இக் கருத்துகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. இது தேர்தல் நேரம் இல்லை. இந்த கருத்தை கூறித்தான் தன்னை தக்க வைக்க வேண்டும் என்ற அவசியமும் இவருக்கு இல்லை. கூட்டணிக்கட்சி காங்கிரஸ் மட்டுமன்றி தனது திமுக தலைமைகூட விரும்பாது என்று தெரிந்தும் தன் கருத்தை தைரியமாக கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment