Wednesday, December 20, 2023

செய்தி – 65 வயதில் அரசியலில் இருந்து

செய்தி – 65 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். கோழிக்கு இரண்டு கால்கள்தான். ஆனால் இதையே நரி சொன்னால் நாம் கோழியின் மூன்றாவது காலை தேட வேண்டும் என்பார்கள். அரசியல்வாதிக்கும் ஓய்வு வயதெல்லை தேவைதான். ஆனால் இதை சுமந்திரன் கூறும்போது சந்தேகப்பட வைக்கிறது. ஏற்கனவே சம்பந்தர் ஐயாவை பதவி விலகும்படி நேரிடையாக கூறினார். இப்போதும் தான் 65 வயதில் ஓய்வு பெறுவேன் என்று மறைமுகமாக சம்பந்தர் ஐயாவுக்குதான் கூறுகின்றார். ஆனால் எப்படி கூறினாலும் சம்பந்தர் ஐயா சாகும்வரை பதவி விலகப்போவதில்லை. சுமந்திரன்கூட 65வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பது சந்தேகமே. ஏனெனில் தீர்வு பெற்று தரவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என கடந்த நல்லாட்சி அரசில் சுமந்திரன் கூறியிருந்தார். தனது ராஜினாமா கடிதம் தன் சட்டைப்பொக்கற்றில்; இருக்கிறது என்றார். தீர்வும் வரவில்லை. கூறியபடி அவரும் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. எனவே இப்போது கூறுகின்றபடி 65 வயதில் ஓய்வு பெறுவார் என்று எப்படி நம்புவது?

No comments:

Post a Comment