Tuesday, December 19, 2023

ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கலையா?

•ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கலையா? அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் ?? திருமலை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் தந்தையை நினைவுகூர பொலிசார் அனுமதிக்காததை ஆடியோ மூலம் தெரிவித்துள்ளார். மாவீரரான தன் தந்தையை நிம்மதியாய் நினைவுகூர அடுத்த வருடமாவது வாய்ப்பு ஏற்படுத்தித்தாருங்கள் என கேட்டிருக்கிறார். அவர் தனக்கு நிதி உதவி தாருங்கள் என கேட்கவில்லை அவர் தனக்கு வீடு கட்டித் தாருங்கள் என கேட்கவில்லை அவர் தனக்கு தீர்வு பெற்று தாருங்கள் என கேட்கவில்லை அவர் தன் தந்தையை நினைவுகூர வாய்ப்பு எற்படுத்தித்தாருங்கள் என்று மட்டுமே கேட்டுள்ளார். அவர் தந்தை சாதாரண மரணம் அடைந்தவர் இல்லை. தமிழ் இனத்திற்காக போராடி மாவீரர் ஆனவர். அவருக்காக குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை இல்லையா? அவரை நினைவுகூர வாய்ப்பு எற்படுத்திக் கொடுப்பது நமது பொறுப்பு அல்லவா. இவர் சம்பந்தர் ஐயாவின் சொந்த தொகுதியை சேர்ந்தவர். மாவீரர்களின் தியாகத்தாலேயே சம்பந்தர் ஐயாவுக்கு பதவி கிடைத்துள்ளது. அந்த பதவி மூலம் இனப் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தராவிட்டாலும் பரவாயில்லை இவர்களை நினைவு கூரும் வாய்ப்பையாவது பெற்றுக் கொடுக்கலாமே? செய்வார்களா நம் தமிழ் தலைவர்கள்?

No comments:

Post a Comment