Tuesday, December 19, 2023

திருக்குறளை எழுதியது கலைஞர் கருணாநிதி

திருக்குறளை எழுதியது கலைஞர் கருணாநிதி என்று தமிழக கல்வி அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். அது பற்றியது அல்ல எனது இந்த பதிவு. லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவருக்கு ஒரு சிலை உண்டு. இது லண்டனில் இருக்கும் பல தமிழருக்கு தெரியாது. நான்கூட அந்த பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சோசலிச கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோதுதான் கண்டேன். ( அப்போது எடுத்த படமே கீழே பதிவு செய்துள்ளேன்) இன்று இந்த திருவள்ளுவர் சிலைக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சென்னையில் உள்ள எனது நண்பர் ஒருவர் இந்த நிகழ்வை குறிப்பிட்டு இவ் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் உண்மையான தமிழ் உணர்வு கொண்டவர்களா அல்லது திராவிட தரப்பு ஆட்களா என கேட்டிருந்தார். ஒருவேளை திருவள்ளுவர் சிலையை அகற்றிவிட்டு அதில் கலைஞர் கருணாநிதி சிலையை வைத்துவிடுவார்களோ என் நண்பர் பயந்திட்டார் போல இருக்கு 😂 திடீரென அறிய தந்ததால் என்னால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமற் போய்டவிட்டது. யாராவது சென்றிருந்தால் அல்லது விபரம் தெரிந்தால் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment