Tuesday, December 19, 2023

கடந்த வருடம் இதே காலப்பகுதியில்

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இவர்கள் டில்லி சென்று வந்தனர். இவர்கள் சென்று வந்த பின்பு இந்திய அரசு தமிழருக்கு தீர்வு எதுவும் பெற்று தரவில்லை. மாறாக மன்னாரில் தமிழர் நிலத்தை தனது இந்திய முதலாளி அம்பானிக்கு பெற்றுக் கொடுத்தது. தமிழரின் திருமலை துறைமுகத்தில் எண்ணெய்குதம் பெற்றுக்கொண்டது. இப்போது இந்த வருடம் வேறு சிலர் டில்லிக்கு சென்று வந்துள்ளனர். இம்முறையும் இந்திய அரசு தமிழருக்கு தீர்வு எதுவும் பெற்று தரப்போவதில்லை. மாறாக தமிழர் வளம் எதனை எடுத்துக்கொள்ளப்போகின்றது என்று அச்சமாக இருக்கிறது. இவர்கள் டில்லிக்கு போவது ஈழத் தமிழருக்காகவா? அல்லது இந்திய நலனுக்காகவா?

No comments:

Post a Comment