Thursday, November 30, 2023

எழுவர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின்

எழுவர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மக்களை நோக்கி நடைப்பயணம் மேற்கண்டபோது அவருக்கு பெரிதும் உதவிகரமாக அமைந்தது “உயிர்வலி” என்ற ஆவணப்படம். அதேபோல் இப்போது சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் ஆவணப்படம் “ மறுக்கப்படும் நால்வர் விடுதலை” முதலில் இப் படத்தை வெளிக் கொணர்ந்த அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இப் படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். பகிரவேண்டிய படம். ஏனெனில் இப் படம் சிறப்புமுகாமில் உள்ளவர்களின் விடுதலைக்கு தமிழக அரசே பொறுப்பு என்பதை தெளிவாக காட்டியுள்ளனர். இனி மத்திய அரசே பொறுப்பு என்று தமிழக முதல்;வரோ அல்லது திமுக உடன்பிறப்புகளோ உருட்ட முடியாது. மக்களை ஏமாற்ற முடியாது. அதுமட்டுமன்றி தமிழக மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே விடுதலை பெற முடியும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மக்களுக்கு இதனை கொண்டு செல்வோம். மக்கள் ஆதரவு மூலம் நால்வர் விடுதலைக்கு வழி காணுவோம். குறிப்பு – கீழே இப் படம் இணைப்பு தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment