Friday, November 17, 2023

சிறையில் முருகன் இருந்தபோது அவரது

சிறையில் முருகன் இருந்தபோது அவரது விடுதலைக்கு குரல் கொடுக்கும்படி சம்பந்தர் ஐயாவிடம் நேரிடையாக கோரிக்கை வைத்தார் முருகனின் தாயார். அப்போதும் சம்பந்தர் ஐயா குரல் கொடுக்கவில்லை. இப்போது முருகன் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போதும்கூட சம்பந்தர் ஐயா முருகனுக்காக குரல் கொடுக்கவில்லை. லண்டனில் இருக்கும் தம் மகளுடன் சென்று வாழப்போவதாக முருகனும் அவர் மனைவி நளினியும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் அனுமதியளிக்காமல் இருக்கின்றன. சம்பந்தர் ஐயா ஏன் முருகன் மீது இரக்கம் காட்ட மறுக்கிறார்? சிறீதரன்கூட மௌனம் காப்பது ஆச்சரியமாக இருக்கிறது. முருகன் ஒரு இந்து மட்டுமல்ல அவர் இப்போது ஒரு சாமியாராகவே காணப்படுகிறார். இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் இந்த முருகன் விடுதலைக்கு குரல் கொடுக்கலாமே?

No comments:

Post a Comment