Thursday, November 30, 2023

சுமந்திரன் - ஆறு தமிழர் 30 வருடமாக சிறையில் இருந்தபோது

சுமந்திரன் - ஆறு தமிழர் 30 வருடமாக சிறையில் இருந்தபோது அவர்களை விடுதலை செய்யச்சொல்லி நாம் ஒருதடவைகூட கேட்கவில்லை. இப்போது அவர்களை சிறப்புமுகாமில் அடைத்திருக்கிறார்கள். இப்பவாவது ஒரு அறிக்கை விடுவமா ஐயா? சம்பந்தர் ஐயா – விடலாம்தான். ஆனால் அப்புறம் இந்திய தூதர் கோபித்தால் என்ன செய்வது? சுமந்திரன் - இல்லை ஐயா, அண்மையில் கொழும்பில் விடுதலையான எட்டு அரசியல் கைதிகளுக்கு லைக்கா முதலாளி உரிமை கோருகிறார். இவர்களுக்காவது நாம் ஒரு குரல் கொடுப்போம். எலெக்சன் வேற வரப்போகுது. போற போக்கைப் பார்த்தால் அடுத்த எலெக்சனில் லைக்கா முதலாளி எம்.பி யாகிவிடுவாரோ என்று பயமாய் இருக்கு. சம்பந்தர் ஐயா – நீர் சொல்ல வார பிரச்சனை எனக்கு புரியுது. ஆனால் எங்கள் கஸ்டம் இந்திய தூதருக்கு புரியுதில்லையே? நான் என்ன செய்வது? சுமந்திரன் - மாவீரர் தினம் வருகுது. அதற்காவது ஒரு அறிக்கை கொடுப்பமா ஐயா? சம்பந்தா ஐயா – மாவீரர் தினத்திற்கு வெளிப்படையா அறிக்கை விட்டால் இந்திய அரசுக்கு பிடிக்காது. அதனால் நீர் ஏதாவது ஒரு மாவீரர் வீட்டுக்கு ரகசியமாக சென்று விளக்கு ஏற்றிவிட்டு வாரும். 😂😂

No comments:

Post a Comment