Thursday, November 30, 2023

கடவுள் இருக்கிறார் என்று கூறுபவர்களே

கடவுள் இருக்கிறார் என்று கூறுபவர்களே கடவுள் இருப்பதை நிரூபிக்க வேண்டும். மாறாக, கடவுள் இல்லை என்று கூறுபவர்களிடம் கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கும்படி கேட்பதில்லை. அதுபோல் பிரபாகரன் இருக்கிறார் என்று கூறுபவர்களே அவர் இருப்பதை நிரூபிக்க வேண்டும். மாறாக, பிரபாகரன் இல்லை என்று கூறுபவர்களிடம் அவர் இல்லை என்பதை நிரூபியுங்கள் என கேட்பது முட்டாள்தனம். பிரபாகரன் இருக்கிறார், அல்லது அவர் இல்லை என்பதற்கப்பால் அவர் இருந்தால் நல்லது என்று நினைக்கும் பலர் இப்போது உண்டு. அவ்வாறு பலர் எண்ணுவதையே சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்த முனைகின்றனர். இதுவே பிரபாகரன் இருக்கிறார் ,துவாரகா வருகிறார் என்ற கதைகளின் அடிப்படை. ஆனால் இவ்வாறு துவாராகா வருகிறார் என்று கூறுவது தமிழ் மக்களுக்கு அளிக்கும் நன்மையைவிட இலங்கை இந்திய அரசுகளுக்கே அதிக பயன் அளிக்கும் என்பதை இவர்கள் உணர மறுக்கின்றனர். அதைவிட தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பிரபாகரன் மீதான நன்மதிப்பிற்கும் பங்கம் விளைவிக்கப்போகிறது என்பதையும்கூட இவர்கள் காண தவறுகின்றனர்.

No comments:

Post a Comment