Friday, November 17, 2023

1990ம் ஆண்டு இந்த கொடிய சிறப்புமுகாமை

1990ம் ஆண்டு இந்த கொடிய சிறப்புமுகாமை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. இப்போது மகன் ஸ்டாலின் அந்த சிறப்புமுகாமில் தொடர்ந்து ஈழத் தமிழர்களை அடைத்து சித்திரவதை செய்கிறார். இதுதான் திராவிட திமுக அரசு ஈழத் தமிழர் மீது காட்டும் அக்கறை என்பதை உலகம் இனியாவது அறிந்து கொள்ளட்டும். சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு. ஆனால் சில திமுக உடன்பிறப்புகள் சிறப்புமுகாமில் உள்ளவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உருட்டை தமிழக தமிழர்கள் மட்டுமன்றி சில ஈழத் தமிழர்களும் நம்பி ஏமாந்துகொண்டிருக்கின்றனர். நான் எட்டு வருடம் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவன். இறுதியாக தாயகம் திரும்ப அனுதி பெற்று விமானம் மூலம் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டவன். “சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளேன். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து பல்வேறு மனிதவுரிமை அமைப்புகளும் அனுப்பியுள்ளேன். தொடர்ந்து சிறப்புமுகாமில் உள்ளவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறேன். அப்படிப்பட்ட எனக்கு சிறப்புமுகாம் பற்றி எதுவும் தெரியவில்லை என இன்று ஒருவர் துப்பி விட்டு சென்றுள்ளார். என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment