Friday, November 17, 2023

15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த

15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோகராஜா நிரோஜன், கரன் எனப்படும் சுப்பிரமணியம் சுரேந்திர ராஜா மற்றும் கனகரத்தினம் ஆதித்தியன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், 2006 ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த மூவரையும் விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மூவரின் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும். மீதி உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை பெற வேண்டும்.

No comments:

Post a Comment