Thursday, November 30, 2023

முதலில் தந்தை செல்வா தலைமையை ஏற்று செயற்பட்டவர்

முதலில் தந்தை செல்வா தலைமையை ஏற்று செயற்பட்டவர் பின்னர் அமிர்தலிங்கம் தலைமையை ஏற்று செயற்பட்டவர் அதன் பின்னர் பிரபாகரன் தலைமையை ஏற்று செயற்பட்டவர் இப்போது துவாராகா தலைமையை ஏற்று செயற்படப்போவதாக கூறுகிறார். நல்லது. யார் தலைமையை தான் ஏற்கிறேன் என்று கூற அவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால் துவாராகாவை விட வயதும் அனுபவமும் மிக்க தானே தலைமை ஏற்றிருக்கலாமே. எதற்காக 14 ஆண்டுகள் துவாரகாவிற்காக காத்து இருந்தார்? இந்த துவாரகா கதை ஆரம்பித்தவுடனேயே சிலர் இதன் கதை வசனம் தயாரிப்பு எல்லாம் இந்திய உளவுப்படை என்றனர். அதை நான் அப்போது நம்பவில்லை. ஆனால் இப்போது இந்தியாவின் துணையுடனே துவாராகா போராடுவாள் என்று இவர் கூறியிருப்பது சந்தேகத்தை தருகிறது. சரி. துவாராகா இந்தியாவின் துணையுடன் போராடுவது இருக்கட்டும். துவாராகா தலைமையில் புலிகளையும் தமிழீழத்தையும் இந்தியா வெளிப்படையாக அங்கீகரிக்க தயாரா?

No comments:

Post a Comment