Wednesday, January 30, 2019

மாவை சேனாதிராசா உயர்ந்த மனிதர்

மாவை சேனாதிராசா உயர்ந்த மனிதர்
அவரது மாவிட்டபுர வீட்டு மதில் சுவர்களும் உயர்ந்தவை
ஆனால் அவரது மனம் உயர்ந்ததாக இருந்திருந்தால்
இந்த கேப்பாப்புலவு மக்கள் வீதியில் பொலிஸ் ட்ரக் வண்டியின் கீழ் உறங்கும் நிலை வந்திருக்குமா?
இந்த உயர்ந்த மனிதருக்கு ஏன் இந்த மக்கள் மீது இன்னும் இரக்கம் வரவில்லை?
தனது வீட்டை மீட்டு அதற்கு உயர்ந்த மதில்களையும் கட்டியவர் இந்த மக்கள் வீதியில் படுத்துறங்குவதை ஏன் கவனிக்க வில்லை?
தான் மட்டுமன்றி தன் மகனையும் மக்கள் சேவை செய்யவென பிரதேசசபை உறுப்பினராக்கி வைத்திருப்பவர் இந்த மக்களை மறந்தது ஏனோ?
பாவம் இந்த மக்கள். தமிழ் இனத்தில் பிறந்தது தவறா? அல்லது இவருக்கு வோட்டுப் போட்டது தவறா?

No comments:

Post a Comment