Wednesday, January 30, 2019

சிரிக்கிறேன். சிரிக்கிறேன்

•சிரிக்கிறேன். சிரிக்கிறேன்
சிரித்தக்கொண்டே இருக்கிறேன்.
இந்தியாவில் அகோரிகள் என்று ஒருவகை சாமியார்கள். உணடு. அவர்கள் நிர்வாணமாக திரிவார்கள். மனித மாமிசம் சாப்பிடுவார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
இந்தியாவில் உத்திரபிரதேசத்தில் கும்பமேளா நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கில் இந்த அகோரிகள் கூடுவதாக கூறுகிறார்கள்.
இந்த கும்பமேளா நிகழ்வுக்கு மோடி அரசு 4000 கோடி ரூபாவை ஒதுக்கி செலவு செய்கிறது.
ஆனால் அதேவேளை தமிழ்நாட்டில் கஜா புயலுக்கு வெறும் 300 கோடி ரூபா மட்டுமே மோடி அரசு வழங்கியது.
வருடம்தோறும் 85000 கோடி ரூபாவை தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெற்றுக்கொள்ளும் மோடி அரசு கும்பமேளா, பட்டேல் சிலை என விரயமாக்கிறது.
இந்த அநியாயத்தை கேட்க முடியாது. கேட்டால் எச்ச.ராசா எம்மை “அன்ரி இன்டியன்” என்பார்.
சரி இப்போது எனது சிரிப்பிற்கான காரணத்தை கூறுகின்றேன். கீழே இணைப்பில் உள்ள வீடியோவை நண்பர் ஒருவர் இணைத்திருக்கிறார். நீங்களும் பாருங்கள். சிரியுங்கள்.
https://www.facebook.com/chandrasekar.jkc/videos/758814621138856/
குறிப்பு- நம்புங்கள். 2020 ல் இந்தியா வல்லரசாம்!
இதைத்தானா வேலியில் போன ஓணானை பிடித்து மடியில் போட்ட கதை என்பதா?
-0:15

No comments:

Post a Comment