Wednesday, January 30, 2019

தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை

தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை
அவர் விதைக்கப்பட்டார்
தமிழரசன்கள் முளைக்கத் தொடங்கிவிட்டார்கள்
ஒரு தமிழரசனை கொன்றுவிட்டு இறுமாப்பாய் இருந்தவர்கள்
ஆயிரமாயிரமாய் தமிழரசன்கள் வருவதை பார்த்து மிரள தொடங்கிவிட்டார்கள்.
இனி தமிரசன் காலம்.
அவர் விரும்பிய தமிழ்தேசியம் மலர தொடங்கிவிட்டது.
அவர் முன்னெடுத்த போராட்டம் வெடிப்பதை இனி யாராலும் தடுத்தவிட முடியாது.
கரை புரண்டு வரும் காட்டாற்று வெள்ளம் இந்திய அரசை தூக்கியெறியப் போகிறது.
தமிழ்நாட்டில் போராட்டம் அதுவும் தமிழரசன் விரும்பிய ஆயுதப் போராட்டம் ஒருபோதும் வராது என்று சிலர் கூறிக்கொண்டு திரிகின்றனர்.
இதுபோலத்தான் யாழ்ப்பாணத்தில் காடு இல்லை. எனவே கொரில்லா போராட்டம் ஒருபோதும் வராது என்று 1983க்கு முன்னர் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.
ஆனால் அதே யாழ்ப்பாணத்தில்தான் உலகம் வியந்த ஆயுதப் போராட்டம் அதுவும் கொரில்லா போராட்ட வடிவில் நடைபெற்றதை வரலாறு பதிவு செய்துள்ளது.
தமிழக மக்களுக்கு விடுதலை உணர்வு வந்திடக்கூடாது என்பதற்காகவே ஈழ விடுதலையை இந்திய அரசு நசுக்கிறது.
ஆனால் இவ்வாறு ஈழ தமிழர்களை நசுக்குவதே இறுதியாக தமிழக விடுதலைக்கு வித்திடப்போகிறது
என்பதை இந்திய அரசு விரைவில் கண்டுகொள்ளும்.
ஈழ தமிழர்களின் போராட்டம் தமிழக மக்களின் விடுதலைக்கு வழிவகுக்கப் போகிறது. தமிழக மக்களின் போராட்டம் இந்திய சிறுபான்மை இன மக்களின் விடுதலைக்கு வழி வகுக்கப் போகிறது
.
இந்தியா சுக்கு நூறாய் உடையப் போகிறது. எப்படி ரஸ்சிய சமூக ஏகாதிபத்தியம் உடைந்ததோ அதுபோல் இந்திய ஏகாதிபத்தியமும் உடையப் போகிறது.
ஆசியாவில் இந்த அதிசய வரலாற்றின் சொந்தக்காரர்களாக இருக்கப்போவது ஈழத் தமிழ் மக்களின் போராட்டமே

No comments:

Post a Comment