Wednesday, January 30, 2019

முதல் பௌத்த மத முறைப்படி திருமணம் என்டாங்கள்

முதல் பௌத்த மத முறைப்படி திருமணம் என்டாங்கள்
அடுத்து கிருத்தவ மத முறைப்படி திருணம் என்டாங்கள்
இப்போது இந்துமத முறைப்படி திருமணம் என்கிறாங்கள்
நாளைக்கு முஸ்லிம்மத முறைப்படி திருமணம் என்றும் போட்டோக்கள் போடுவாங்கள்
நீங்க எந்த முறைப்படியும் திருமணம் செய்துவிட்டு போங்கடா
ஆனால் விதம் விதமாய் வேடமிட்டு போட்டோ போட்டு கடுப்பு ஏத்தாதீங்கடா
ஏனென்றால் நாங்க அப்பவே சிவாஜியின் ஒன்பது வேடத்தில் நவராத்திரி படத்தை பார்த்தவங்கடா
அப்புறம்’ கமலின் பல வேடங்களில் தசாவதாரம் பார்த்தவங்கடா
ஒருபுறம் நாயாற்றில் பிள்ளையார் கோவிலை அகற்றிவிட்டு புத்தர் சிலையை வைக்கிறீங்க
மறுபுறத்தில் எந்த மதமும் சம்மதமும் என்றும் எல்லா மதத்தையும் மதிப்பதாக வேடம் போடுறீங்க
முதல்ல இந்த கேப்பாப்புலவு குழந்தைக்கு படுத்துறங்க அதன் சொந்த நிலத்தை கொடுங்கடா

No comments:

Post a Comment