Wednesday, January 30, 2019

தமிழனை கள்ள தோணியில் வந்தவன் என்றார்கள்

தமிழனை கள்ள தோணியில் வந்தவன் என்றார்கள்
அப்ப விஜயனும் அவனது கூட்டாளிகளும்
கட்டார் எயர்வேஸில் வந்தவர்களா என்று கேட்டால் பதில் இல்லை.
தமிழனை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்கிறார்கள்
அப்ப புத்தர் என்ன இங்கிலாந்திலிருந்து வந்தவரா?
அவரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டியதுதானே என்று கேட்டால் பதில் இல்லை.
பிள்ளையார் கோவிலை அகற்றிவிட்டு புத்த விகாரையை கட்டுகிறார்கள்.
நீயும் இந்து நானும் இந்து என்று தமிழர்களுக்கு கதை சொல்லும் பார்ப்பாண் இதைக் கண்டுக்காம இருக்கிறான்.
அவன் பிள்ளையாரை தூக்கி பிடிப்பதும்
இவன் புத்தரை தூக்கி பிடிப்பதும்
தங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து விடக்கூடாது என்பதற்காகதானே!

No comments:

Post a Comment