Wednesday, January 30, 2019

பலவிதமான நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன

பலவிதமான நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு நூல் பற்றிய விமர்சனங்களே இன்னொரு நூலாக வருவது இப்போதுதான் நான் அறிகிறேன்.
அதுவும் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”நூல் பற்றிய விமர்சனங்களே இன்னொரு நூலாக வந்திருக்கிறது.
நான் எழுதிய “ ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் பற்றி பலர் தங்கள் மதிப்பீடுகளையும் திறனாய்வுகளையும் செய்திருந்தார்கள்.
அதனை தோழர் தமிழ்நேயன் ஒரு நூலாக தொகுத்து பொதுமை பதிப்பகம் சார்பில் வெளியிடுகிறார்.
இவ் நூலை 04.01.19 யன்று சென்னை புத்தக கண்காட்சியில் அரங்கம் 222ல் பெற்றுக்கொள்ளலாம்.
தோழர் தமிழ்நேயனுக்கும் பொதுமை பதிப்பகத்திற்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நானும் இந்த நூலை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

No comments:

Post a Comment