Wednesday, January 30, 2019

•“நரி” சம்பந்தர் அய்யாவுக்கு பதவி ஆசை இல்லையாம்!

•“நரி” சம்பந்தர் அய்யாவுக்கு பதவி ஆசை இல்லையாம்!
எட்டாப்பழம் புளிக்கும் என்பது நரிகளுக்கு மட்டுமல்ல சம்பந்தர் அய்யாவுக்கும் பொருந்தும்.
பெருந்தன்மையாக பதவியைவிட்டு விலகியிருந்தால் கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சியிருக்கும்.
அதைவிட்டு தூக்கியெறிந்த பின்பு பதவி ஆசை இல்லை என்று அறிக்கை விடுவதை யாரும் நம்ப தயாரில்லை.
பதவிக்காக சிங்ககொடி ஏந்தியவர்
பதவிக்காக மகிந்தவை தேசிய தலைவர் என்றவர்
பதவிக்காக புலிகளை பயங்கரவாதிகள் என்றவர்
பதவிக்காக ஜ.நா வில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் பெற்றுக்கொடுத்தவர்
பதவிக்காக சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றவர்
பதவிக்காக அந்த உள்ளக விசாரணையைக்கூட வலியுறுத்தாமல் கைவிட்டவர்
தனக்கு,
பதவியோடு இரண்டு சொகுசு பங்களா பெற்றவர்
பதவியோடு 6 சொகுசு வாகனங்கள் பெற்றவர்
பதவியோடு 30 சிங்கள பொலிசார் பாதுகாப்பை பெற்றவர்
தமிழ் இளைஞர்கள் வேலை கேட்டபோது “வேலை கேட்டால் அப்புறம் தீர்வு பெற முடியாமல் போய்விடும்” என்றவர்
தனது பதவிக்காக ஓடி ஓடி மைத்திரி மகிந்த ரணில் ஆகியோருடன் பேசியவர்
காணாமல் போனோர் பிரச்சனை
சிறைக் கைதிகள் விடுதலை
மீள்குடியேற்றம் போன்றவற்றுக்காக பேசவில்லை.
இப்போது பதவி பறிபோனவுடன் தனக்கு பதவி ஆசை இல்லை என்கிறார்.
நம்பிட்டோம் அய்யா? போய் வாருங்கள்!!

No comments:

Post a Comment