Wednesday, January 30, 2019

ஐபிசி தமிழ் தேசிய ஊடகமா? அல்லது “மாபியா” ஊடகமா?

• ஐபிசி
தமிழ் தேசிய ஊடகமா?
அல்லது “மாபியா” ஊடகமா?
ஜபிசி ஊடக முதலாளிக்கு எதிராக விமர்சனம் வைப்போரை “மாபியா கும்பல்கள்”பாணியில் மிரட்டியுள்ளனர்.
அதுவும் தரக்குறைவாக மிகவும் கேவலமாக நாகரீகமற்ற முறையில் வீடியோவாக பதிவு செய்து மிரட்டியுள்ளனர்.
தங்களை விமர்சித்த ஒருவரின் மகள் கா- - லியுடன் ஓடி விட்டாள் என்று கூறுகிறார்கள்.
பொதுவெளியில் கறுப்பு இன மக்களை கா - - லி என்று கூறுவதே தவறு. இவர்கள் ஒரு தமிழ் பெண்ணையும் சேர்த்து அசிங்கப்படுத்துகிறார்கள்.
இவர்களா தமிழ் தேசிய ஊடகம்? தமிழரை அசிங்கப்படுத்தும் ஊடகம் தமிழ் தேசிய ஊடகமாக முடியுமா?
இப்பவே இந்த ஆட்டம் போடுபவர்கள் இவர்கள் விரும்பியபடி பலமான ஒரு ஊடகமாக வளர்ந்தால் என்ன ஆட்டம் போடுவார்கள்?
அதுமட்டுமல்ல தங்களுடன் சேட்டை விட்டால் தேடி வந்து மிதிப்பார்களாம்.
என் வாழ்க்கையில் இப்படி ஒரு சவால் விடும் ஊடகத்தை இப்பதான் பார்க்கிறேன்.
இலங்கை அரசின் விருப்பப்படி புலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் பணியை ஜபிசி மேற்கொள்கிறது என சிலர் கூறியபோது நான் அதை நம்பவில்லை.
ஆனால் இப்போது இவர்களின் மிரட்டல்களை கவனிக்கும்போது அது உண்மைதானோ என்ற எண்ணத் தோன்றுகிறது.
குறிப்பு- இவர்களின் மிரட்டல் வீடியோ பின்னூட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment