Wednesday, January 30, 2019

முத்துக்குமாரா எங்களை மன்னித்துவிடு!

•முத்துக்குமாரா எங்களை மன்னித்துவிடு!
“முத்துக்குமாருக்கு வீர வணக்கம்.
உன் மூச்சுக்காற்று சோனியாவை எரிக்கும்” என்று நாங்கள் பாட்டு பாடியது உண்மைதான்.
ஆனால் மதவாத மோடியை ஒழிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு அன்னை சோனியாவே வருக என்று இப்போது பாட ஆரம்பித்து விட்டோம்.
என் பிணம்கூட காங்கிரசுடன் கூட்டணி வைக்காது என்று கூறியவர் இப்போது ராகுல் காந்தியின் தலைமையில் தேசம் காக்க மாநாடு நடத்துகிறார்.
காங்கிரசையும் திமுகவையும் எதிர்த்து நீ உன் உயிரை விட்டாய். உன் உடலை தூக்கி சுமந்தவர்கள் இப்போது அதே காங்கிரசையும் திமுக வையும் தூக்கி சுமக்க ஆரம்பித்து விட்டார்கள்.
சோனியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்த நீ உன் முகத்தை தீயினில் எரித்தாய். ஆனால் ஈழத் தலைவர் ஒருவர் அன்னை சோனியாவின் முகத்தில் இரக்கத்தை கண்டேன் என்று லண்டனில் அறிக்கை விடுகிறார்.
மன்னித்தவிடு முத்தக்குமாரா, உன்னை நினைவு கூரக்கூட எமக்கு நேரம் இல்லை. ரஜனியின் பேட்ட
யா அல்லது அஜீத்தின் விசுவாசமா வசூல் அதிகம் என்பதே எமக்கு இப்போ முக்கிய பிரச்சனை.
குறிப்பு – 29.01.2019 யன்று முத்துக்குமாரின் நினைவு தினம் ஆகும்.

No comments:

Post a Comment