Wednesday, January 30, 2019

•தமிழ் மக்களுக்கு பொங்கல் நற்செய்தி!

•தமிழ் மக்களுக்கு பொங்கல் நற்செய்தி!
என்ன தீர்வு வந்திட்டுதா என நினைக்கிறீர்களா?
இல்லை
அப்ப சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்களா?
அதுவும் இல்லை
அப்படியென்றால் இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை தரப்போகிறதா?
அதுவும் இல்லை.
காணாமல்போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு தரப்பட்டு தாய்மார் போராட்டத்தை கைவிட்டுவிட்டார்களா?
அதுவும் இல்லை
அப்படியென்றால் இவற்றைவிட அந்த நற்செய்திதான் என்ன?
மகிந்த ராஜபக்சா தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பங்களா தேவையில்லை என்றும் அதில் சம்பந்தர் அய்யா தொடர்ந்து தங்கலாம் என்று கூறிவிட்டார்.
சம்பந்தர் அய்யா தொடர்ந்து இரண்டு கொகுசு பங்களாவில் வசிக்கலாம். இந்த பங்களாவை நம்பி வந்த அவரது மகனும் மகளும் இனியும் அவருடன் சேர்ந்து தங்கலாம்.
சம்பந்தர் அய்யா மானஸ்தர். பதவி போனால் ஒரு நிமிடம்கூட சொகுசு பங்களாவில் இருக்கமாட்டார் என்று நினைத்தவர்கள் இனி அந்த நினைப்பை கைவிடுங்கள்.

No comments:

Post a Comment