Sunday, August 28, 2022

சுமந்திரன் - இந்த இந்தி திணிப்புக்கு எதிராக

சுமந்திரன் - இந்த இந்தி திணிப்புக்கு எதிராக போராட மாணவர்கள் அழைப்பு விட்டிருக்கிறார்கள். அதனால பயமாக இருக்கிறது ஐயா. சம்பந்தர் - அதற்கு ஏன் தம்பி பயப்படுகிறீங்க? அதை நம்ம தூதுவர் பார்த்துப்பார்தானே? சுமந்திரன் - இல்லை கொழும்பில நடந்த மாதிரி எங்க வீடுகளை கொளுத்திடுகிற போராட்டமாக மாறிடுமோன்னுதான்? சம்பந்தர் - சம்பூரில் 500 எக்கர் நிலம் இந்தியாவுக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரித்து தமிழ் மக்கள் என்னிடம் வந்து கேட்டபோது நான் என்ன கூறினேன்? சுமந்திரன் - நிலம் வழங்கவதை எதிர்த்தால் அப்புறம் இந்திய அரசு தீர்வு பெற்று தராது என்று கூறினீர்கள். சம்பந்தர் - அதே மாதிரி இப்பவும் இந்தியை எதிர்த்தால் அப்புறம் இந்திய அரசு தீர்வு பெற்று தராமல் இருந்திடும் என்று கூறுங்கள் சுமந்திரன் - இப்படி எத்தனை நாளைக்கு தமிழ் மக்களை ஏமாற்றுவது ஐயா? சம்பந்தர் - தீபாவளிக்கு தீர்வு என்று நான் கூறினேன். இப்ப யாராவது அது எங்கே என்று கேட்கிறார்களா? அதுபோல் இந்தி பிரச்சனையும் மக்கள் மறந்துவிடுவார்கள். பயப்படாதீர்கள்.

No comments:

Post a Comment