Saturday, August 31, 2024

இந்த பூமி தனிப்பட்ட

“இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ,ஒரு தேசத்தினுடையதோ அல்ல. ஏன் மனிதனின் கூட்டுச் சொத்தும் அல்ல. நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில் வரும் தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது” - காரல் மார்க்ஸ் நாம் இயற்கையை வெல்ல முடியாது. ஆனால் இயற்கை அழிவில் ஏற்படும் இழப்பை குறைக்க முடியும். மண் சரிவு நிகழப்போகிறது என்று அறிவித்த பின்பும் இத்தனை உயிர் இழப்பு எப்படி ஏற்பட்டது? அரசு பொறுப்பு கூறவேண்டும்.

கேரள அரசு கொல்லப்பட்ட

கேரள அரசு கொல்லப்பட்ட தனது இரு மீனவக் குடும்பங்களுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு 700க்கு மேற்பட்ட தனது மீனவர்கள் கொல்லப்பட்ட பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இதற்கு காரணம் மலையாளிகளை மலையாளிகள் ஆளுகின்றனர். ஆனால் தமிழரை தமிழர் அல்லாதவர் ஆளுகின்றனர் என்றே நினைக்க தோன்றுகிறது. இந்திய அரசின் பட்ஜட்டில் தமிழ்நாடு மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் சிங்கள அரசுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தும் சிங்கள அரசு நன்றி மறந்து தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொல்லுகின்றது. சிங்கள அரசின் இந்த தைரியத்திற்கு காரணம் இந்திய அரசோ அல்லது தமிழக அரசோ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற நம்பிக்கையே. அதனால்தான் போர் அற்ற இந்த காலத்திலும் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி தமிழக மீனவர்களைக் கொல்லுகின்றது. இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்வார்களா?

ஒருபுறம் கிரிக்கட்டில்

ஒருபுறம் கிரிக்கட்டில் தோற்றதற்காக தமிழக மீனவனை சிங்கள கடற்படை கொல்கிறது. மறுபுறம் சிங்கள கிரிக்கட் வீரருக்கு சென்னையில் பாராட்டுவிழா நடக்கிறது. 50 வருட திராவிட ஆட்சியின் மகிமை இது?

செய்தி – 40கிலோ எலி இற

ைச்சியுடன் கந்தளாயில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவகங்களில் பிரியாணி,கொத்துரொட்டி, பற்றிஸ் வாங்குவோர் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை. குறிப்பு – பதிவில் கூறப்பட் செய்திக்கும் கீழே உள்ள படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை 😂

இந்தியன் மைலாய்

•“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்! 1968 மார்ச் 16 யன்று அமெரிக்க ராணுவம் வியட்நாமில் 347 அப்பாவி வியட்நாம் மக்களை சுட்டுக் கொன்றது. இது மைலாய் படுகொலைகள் (My Lai Massacre ) என அழைக்கப்படுகிறது. 1989 ஆகஸ்ட் 2 யன்று வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என வந்த இந்திய ராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்தது. இப் படுகொலைகள் “இந்தியன் மைலாய்” என அழைக்கப்படுகிறது. •64 பொது மக்கள் கொல்லப்பட்டனர் •100 க்கு மேற்பட்டோர் காய மடைந்தனர் •50 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். •சுமார் 200 வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. •40 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன . •150 க்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டன. •வல்வை நூலகம் முற்றாக எரித்து சேதமாக்கப்பட்டது. இத் தாக்குதல்கள் ஆகஸ்ட் 2, 3. 4 திகதிகளில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இறந்தவர்களின் உடல்களை எடுத்து அடக்கம் செய்யக்கூட இந்திய ராணுவம் அனுமதிக்கவில்லை. வியட்நாம் கொலைகளுக்காக 26 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஒரு அதிகாரிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் படுகொலை செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வல்வைப் படுகொலைகளுக்காக எந்தவொரு இந்திய ராணுவ அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. சீக்கிய படுகொலைகளுக்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி, வல்வை படுகொலைகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை. வியட்நாம் படுகொலைக்காக அனுதாபப்பட்ட சர்வதேசம்கூட வல்வைப் படுகொலைகளையிட்டு கவனம் கொள்ளவில்லை ராஜீவ் கொலைக்கு நீதி கோருவோர் வல்லைப் படுகொலைக்கு ஏன் நீதி கோருவதில்லை? ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் ராஜீவுக்கு போனால் உயிர். தமிழனுக்கு போனால் ம - ர். அப்படித்தானே?

400 இந்தியர்களை

400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட அதிகாரி டயரை இங்கிலாந்து சென்று கொன்ற உதம்சிங்கை "தியாகி" என்று கௌரவிக்கும் இந்திய அரசு, 8000 தமிழர்களை கொல்ல காரணமான ராஜீவ் காந்தியை இந்தியா சென்று கொன்ற தாணுவை "பயங்கரவாதி" என்கிறது. இது என்ன நியாயம்? (31.07.2024 உதம் சிங் நினைவு தினம்)

இன்று ஆகஸ்ட் 2ம் திகதி

இன்று ஆகஸ்ட் 2ம் திகதி தனிநாயகம் அடிகளாரின் 111வது பிறந்த தினம் ஆகும். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி முதல் நான்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தியவர் தனிநாயகம் அடிகளார். இதனால் ஈழத் தமிழர்களால் மட்டுமன்றி உலகத் தமிழர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர். அத்தகைய தனிநாயகம் அடிகளார் பற்றி வட்ஸ்அப்பில் உலாவிய ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. தனிநாயகம் அடிகளார் ஒரு பறங்கியர் என்றும் தனது கிருத்தவமத வளர்ச்சிக்காக துரையப்பா மீது வீண் பழி சுமத்தி இளைஞர்கள் மூலம் துரையப்பாவை கொன்றார் என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடல் முழுவதும் இந்து மத வெறி கொண்ட ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு செய்தியை எழுத முடியும். இது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாற்றும் காலம். எனவே தாராளமாக துரையப்பாவை தியாகியாக மாற்றட்டும். ஆனால் அதற்காக தமிழுக்காக வாழ்ந்து மடிந்த தனிநாயகம் அடிகளாரை துரோகியாக்க வேண்டாம்.

பக்கத்து வீட்டிலே கோழியைக்

“பக்கத்து வீட்டிலே கோழியைக் கொன்னுட்டாங்க. தட்டிக் கேட்கலாம் என்று போனேன் ஒரு கோப்பை குழம்பு கொடுத்தாங்க பேசாம வாங்கிட்டு வந்திட்டேன் எப்படி நம்ம ராஜதந்திரம்?” குறிப்பு - இந்த பதிவிற்கும் கீழே உள்ள படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?😂

கடந்தமுறை தமிழ்பேசும்

கடந்தமுறை தமிழ்பேசும் மக்களின் வாக்கு தேவையில்லை எனக்கூறி தனிச் சிங்கள வாக்கில் கோத்தா வெற்றி பெற்றார். ஆனால் இம்முறை யாரும் தனிச் சிங்கள வாக்கில் வெற்றி பெற முடியாது. அதுமட்டுமன்றி தனி சிங்கள வாக்கில் வெற்றி பெறுவது பயன் இல்லை என்றும் சிங்கள அரசியல்வாதிகள் பேசுகின்றனர். குறிப்பாக ஜேவிபி தலைவர் அனுரா அவர்கள் தெற்கு அரசியல்வாதிகள் இதுவரை இனவாத அரசியலையே மேற்கொண்டு வந்தனர் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறிவந்த சிங்கள தலைமைகள் இப்போது தமது இனவாத அரசியல் பற்றி பேசுகின்றனர். நல்ல மாற்றம். வரவேற்போம். குறிப்பு – வெற்றியை வேற்றி என எழுதப்பட்டுள்ளது. அனுராவின் பிரச்சாரப்பிரிவினர் இதை கவனத்தில் கொள்ளவும்.

ஒரு டவுட் ?

• ஒரு டவுட் ? பெண்ணின் முதல் மாதவிடாயை சாமாத்திய விழாவாக எமது சமூகம் கொண்டாடுகிறது. அதுவும் புலம்பெயர்ந்து போன கனடா நாட்டில் ஹெலிகொப்டர் பிடித்தெல்லாம் கொண்டாடுகிறது. பரவாயில்லை. இங்கு எனது டவுட் என்னவென்றால், பெண்ணின் முதல் மாதவிடாயை கொண்டாடும் எமது சமூகம் அடுத்தடுத்த மாதவிடாயை தீட்டாக ஏன் பார்க்கிறது? ஏன் அவ் வேளைகளில் பெண்ணை கோயிலினுள் செல்லவிடாமல் தடுக்கிறது? எமது பெண் கடவுள்களுக்கு மாதவிடாய் வருவதில்லையா? அவர்களுக்கும் தீட்டாக பார்க்கப்படுகிறதா? காலத்திற்கு எற்ப பழக்கவழக்கங்களை நாம் மாற்றினால் என்ன? குறிப்பு – யாருடைய மனதையும் புண்படுத்துவது என் நோக்கம் இல்லை. யாரிடமாவது பதில் இருந்தால் பகிருங்கள்.

திருடர்கள் ஜாக்கிரதை!

•திருடர்கள் ஜாக்கிரதை! திருடர்கள் இரண்டு வகைப்படும் (1) சாதாரண திருடர் (2) அரசியல் திருடர் சாதாரண திருடர் - இவர்கள் எமது பணம், நகை, கடிகாரம், கைபேசி போன்ற எமது உடமைகளை திருடுபவர்கள். அரசியல் திருடர் - இவர்கள் எமது எதிர்காலம், கனவு, தொழில், சம்பளம், ஆரோக்கியம், கல்வி, மகிழ்ச்சி என பலவற்றை திருடுபவர்கள். இந்த இரண்டு திருடர்களுக்குள் வேறுபாடு என்னவெனில், சாதாரண திருடர் நம்மை தெரிவு செய்கின்றனர். அரசியல் திருடரை நாம் தெரிவு செய்கிறோம். அதைவிட, சாதாரண திருடர்களை பொலிஸ் கைது செய்யும். அரசியல் திருடர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கும். எச்சரிக்கை – தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. யோக்கியன்கள் வருவார்கள். செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்.😂 நேற்று ஒரு யோக்கியன் (ரணில்) யாழ்ப்பாணம் வந்தார். இனி மற்ற யோக்கியன்களும் வருவார்கள். கவனம்.

தேர்தல் நேரத்தில் அகதிகளுக்கு

தேர்தல் நேரத்தில் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்கப்படும் என திராவிட முதல்வர் வாக்குறுதி அளித்தார். தேர்தல் முடிந்த பின்பு இப்போது அகதிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப அவர் முயல்கிறார். அகதிகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக திருப்பி அனுப்பக்கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இப்போது அந்த நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அகதிகளை பலவந்தமாக திருப்பி அனுப்ப முயல்வது கண்டனத்திற்குரியது. இது குறித்து முதல் கண்டனக்குரல் வழக்கம்போல் சீமான் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது. ஈழத் தமிழர் ஏன் சீமானை ஆதரிக்கின்றனர் என கேட்பவர்களுக்கு பதில் இது. குறிப்பு - இந்தியாவில் தொடர்ந்து வாழ விரும்பும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். திரும்பி வர விரும்பும் அகதிகளுக்கு மறுவாழ்வுக்குரிய உதவிகளும் ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். இதுவே இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் பிரச்சனைக்கான தீர்வாகும்.

தோழர் பிரடெரிக் எங்கெல்சின்

தோழர் பிரடெரிக் எங்கெல்சின் நினைவு நாள்(05.08.24) தோழர் எங்கெல்ஸ் இல்லையேல் கால் மார்க்ஸ் இல்லை. மாக்சியமும் இல்லை என்று தோழர் லெனின் கூறியிருந்தார். ஆனால் தோழர் எங்கெல்ஸ் “அனைத்து பெருமைகளையும் தன் நண்பன் கால் மார்க்ஸ்ற்கே உரியது” என்று அடக்கத்துடன் கூறுகிறார். அத்தகைய மாபெரும் ஆசான் தோழர் எங்கெல்ஸ் நினைவு தினம் இன்று ஆகும். (05.08.2024) உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெய்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார். தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறுகிறார். மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார். எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவஞானி;. எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.

ஈக மன்றோ ஈகம்

ஈக மன்றோ ஈகம் ================ மானமும் உயிரும் வாழ்வும் கருதி வானமும் நிலமும் நீரும் கடந்து கானமும் புகுந்து களத்தினும் நெரிந்து தானும் குடும்பும் இனமும் இடர்ப்பட ஆயிரம் ஆயிரம் இளையரும் பெண்டிரும் மாய்வதும் திரிவதும் ஆகிய நிலைகொள் ஈழத் தமிழர் இடையினில் தோன்றிக் காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை தன்னையும் இழந்து தமரையும் இழந்த அன்னைக் குலத்தோர் அறங்கூர் மறத்தி - 'தானு'வென் பெயரினள் தன்னினம் அழித்த வீணனுக் கெதிரா வெகுண்ட வெஞ்சினம் நெஞ்சினும் உயிரினும் நிலைத்த நினைவொடு ஒருதனி நின்றே ஊர்நடு சிதைத்த ஈக மன்றோ ஈகம் ஆகுமோ உலகவள் அழிவிலாப் புகழ்க்கே! பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1991)

செய்தி - இனப்பிரச்னைக்கு

செய்தி - இனப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி ரணில் கடந்த இரண்டு வருடமாக ஜனாதிபதியாக இருக்கிறார். தீர்வுக்காக ஒரு ஆணியும் பிடுங்கவில்லை.

இந்தியாவில் தொடர்ந்து வாழ

இந்தியாவில் தொடர்ந்து வாழ விரும்பும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். திரும்பி வர விரும்பும் அகதிகளுக்கு மறுவாழ்வுக்குரிய உதவிகளும் ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். இதுவே இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் பிரச்சனைக்கான தீர்வாகும். பிரதமர்கள் சிறிமா சாத்திரி ஒப்பந்த அடிப்படையில் தாயகம் திரும்பிய சுமார் 30000 இந்திய வம்சாவளித் தமிழர்கள் இன்னமும் அகதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இலங்கை அரசு திரும்பி ஏற்றுக்கொள்ளாது. அவர்களால் இனி இவங்கைக்கு வர முடியாது. எனவே இந்திய அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்கியே ஆக வேண்டும். இது குறித்து மலையக தமிழர் தலைவர் ஜீவன் தொண்டைமான் அவர்கள் அக்கறை காட்டாதது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் சினிமா நடிகைகளை அழைத்து வந்து கூட்டம் போடுவதில் காட்டும் அக்கறையை தமது மக்கள் மீதும் காட்ட வேண்டும்.

பாராளுமன்ற பாதை மூலம்

பாராளுமன்ற பாதை மூலம் இதுவரை தமிழ் தலைவர்கள் பெற்றுத்தந்த தீர்வு என்ன?

கேரளாவில் கம்யுனிஸ்டாக

கேரளாவில் கம்யுனிஸ்டாக இருந்தாலும் மலையாளி தன்னை மலையாளியாக உணர்கிறான். அவன் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று அறைகூவல் விட்டுக்கொண்டு மறுபுறம் அருகில் இருக்கும் தமிழ் தொழிலாளிக்கு தண்ணி கொடுக்க மறுக்கிறான். கர்நாடகாவில் பிஜே.பி யாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரசாக இருந்தாலும் சரி கன்னடன் தன்னை கன்னடனாகவே உணர்கிறான். அதனால்தான் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு காவிரி தண்ணி கொடுக்க அவன் மறுக்கிறான். ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் தன்னை தமிழனாக உணர வேண்டும் என்றால், ஒருத்தன் “இல்லை, திராவிடனாக உணர வேண்டும்” என்கிறான். இன்னொருத்தன் “சாதி”யாக உணர வேண்டும் என்கிறான். வேறு ஒருத்தன் “ இந்து” வாக உணர வேண்டும் என்கிறான். இதையும்மீறி யாராவது தமிழன் தன்னை தமிழானாக உணர்ந்தால் உடனே அவனை “தமிழ் இன வெறியன்” என்கிறார்கள். மலையாளி தன்னை மலையாளியாக உணர்வதை “மலையாள இனவெறி” என்று கூறாதவர்கள், கன்னடன் தன்னை கன்னடனாக உணர்வதை “கன்னட இனவெறி” என்று கூறாதவர்கள், தமிழன் தன்னை தமிழனாக உணர்வதை மட்டும் “தமிழ் இனவெறி” என்று கூறுகிறார்கள். கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலை வாயப்பு என சட்டம் இயற்றுகிறார்கள். நாகலாந்தில் அம் மாநிலத்தவருக்கே வேலையில் முன்னுரிமை என சட்டம் இயற்றியுள்ளார்கள். குஜராத் உட்பட பல மாநிலங்களில் இப்படி சட்டம் இயற்றி செயற்படுத்துகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் திருச்சி ரயில்வேயில் 90 வீதமான வேலை வாய்ப்பு வட இந்தியருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழனுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குங்கள் என்றால் தமிழன் என்றால் யார் என்று நக்கலாக கேட்கிறார்கள் தமிழன் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை குறித்து அக்கறை கொள்ளவில்லை. மாறாக மலையாள நடிகர் அஜீத் எப்போது அடுத்த படம் நடிப்பார் என கவலைப் பட்டுக்கொண்டு இருக்கிறான். என்னே அவலம்? ஒரேயொருமுறை தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்தால் போதும். அது எப்போது நிகழும்?

அமைச்சர் உதயநிதிக்கு

"அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்திருக்கிறது. ஆனால் பழுக்கவில்லை" – திராவிட முதல்வர் ஸ்டாலின் வாரிசு அரசியலுக்கு இலங்கையில் ஏற்பட்ட முடிவு தமிழ் நாட்டிலும் ஏற்படுமா?

ஈழத் தமிழருக்கு கலைஞர் செய்த

ஈழத் தமிழருக்கு கலைஞர் செய்த துரோகம் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது.

அந்த தாயார் சிகிச்சைக்காக

அந்த தாயார் சிகிச்சைக்காக சென்னை சென்றபோது கலைஞர் அவரை வயதான நோயாளி என்றும் பார்க்காமல் திருப்பி அனுப்பினார். இத்தனை கொடுமைகளும் பார்வதி அம்மாள் ஒரு தமிழர் என்பதால்தானே நடைபெற்றது ஒருவேளை அவர் சிங்கள இனத்திலோ அல்லது வேறு இனத்திலோ பிறந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

கடவுள் கந்தன் கற்றுக்

கடவுள் கந்தன் கற்றுக் கொடுக்கும் முக்கிய விடயம் என்னவெனில் ஆயுதத்தின் மூலமே தீர்வு பெற முடியும் எனபதுதான். கடவுள் கந்தன் எப்போதும் கையில் வேலாயுதத்துடனே காட்சியளிக்கிறார். அவர் சூரனை அகிம்சை முறையில் தோற்கடிக்கவில்லை. மாறாக தனது வேலாயுத்தின் மூலமே வதம் செய்தார் என்று புராணம் கூறுகிறது. எனவே கடவுள் கந்தன் காட்டிய வழியில் தமிழ் மக்களும் தீர்வு பெற வேண்டுமாயின் ஆயுதப் போராட்டமே ஒரே வழியாகும். ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த போராளிகளை பயங்கரவாதிகள் என்று சிங்கள அரசும் இந்திய அரசும் கூறுகின்றன. அப்படியென்றால் நாம் வணங்கும் கடவுள் கந்தனே முதல் பயங்கரவாதியாகும்.

ஒரு குரங்கு வளர்ப்பவன்,

ஒரு குரங்கு வளர்ப்பவன், குரங்குகளுக்கான உணவு திட்டத்தை குரங்குகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். காலையில் மூன்று ரொட்டி, மாலையில் நான்கு ரொட்டி வழங்கப்படும் என்றான் அப்போழுது மாலை நேரம் என்பதால் எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன. சில நாட்கள் போனது. ஒரு நாள் காலை நேரத்தில் எல்லாக்குரங்குகளும் புரட்சி செய்தன எங்களுக்கு காலையில் மூன்று போதாது என்று குரல் எழுப்பின. குரங்கு வளர்ப்பவன் சொன்னான் அப்படியென்றால் காலையில் நான்கு மாலையில் மூன்று. குரங்குகளுக்கு சந்தோசம் தங்களுடைய புரட்சி வெற்றியடைந்ததாக. இதற்கு திருப்ப்தியடைந்தது எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன. குரங்கு வளர்ப்பவன் சிரித்துக்கொண்டான். ஏனென்றால் அவனுக்கு தெரியும் எப்படி இருந்தாலும் மொத்தம் ஏழுதான் என்று. இந்த குரங்குகளின் நிலை போன்றதே இலங்கை மக்களின் நிலையும். இந்த (குரங்கு) மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு போராட்டம் செய்து வேறு ஒரு ஆட்சியைக் கொண்டு வருகிறார்கள். ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள். ஆனால் ஆட்சி மாறுவதில்லை.; மக்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. தாம் ஆட்சியாளர்களை தோற்கடித்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனகர். ஆனால் உண்மை என்னவெனில் மக்கள்தான் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும்

தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும் என்ற எமது இலக்கு வெற்றி பெற வேண்டுமாயின் அதனை அடைவதற்குரிய பாதை எது என்பது குறித்தும் நாம் தெளிவாக கண்டறிய வேண்டும். இன்று இரண்டு பாதைகள் எம்முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதை. இன்னொன்று அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையாகும். ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை பலாத்கார முறையென்றும் அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையை சாத்வீக பாதையென்றும் இன்னொரு வடிவத்தில் சிலர் வரையறை செய்கிறார்கள். புலிகள் இயக்கம் வெற்றி பெறவில்லை என்பதை வைத்து ஆயுதப் போராட்டம் பயனற்றது என இன்று சிலர் போதிக்க முற்படுகின்றனர். புலிகள் மௌனித்தது தங்களது ஆயுதங்களையே ஒழிய ஆயுதப் போராட்டத்தை அல்ல. 1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் தமிழரசுக்கட்சி 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தை பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது. அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சி தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை. இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள். இதனை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது. மக்களை ஏமாற்றவும் புரட்சியின் கவனத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவுமே முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுகின்றனர். இதன்மூலம் இந் நாடுகளில் உண்மையான அதிகாரம் ஆயுதம் தாங்கிய படைகளின் கையில்தான் இருக்கின்றது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் பேச்சுவார்த்தைகளினால் தீர்வு பெறும்படி கூறுவதன் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றனர். எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கத்தை அடக்கிவைத்திருப்பது பலாத்காரத்தின் மூலமே. ஆயுதம் தாங்கிய படைகள் உள்ளடங்கிய ஒரு அரசு இயந்திரத்தை இதற்காக உருவாக்கி வைத்திருக்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கி இல்லாமல் ஒரு நிமிடமேனும் ஆளும் வர்க்கத்தால் ஆட்சி நடத்த முடியாது. அதனால்தான் “அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது” என்று தோழர் மாசேதுங் கூறினார். இதன் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கத்தின் பலாத்காரத்திற்கு எதிராக ஆளப்படும் வர்க்கம் எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்காமல் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று புரட்சியாளர்கள் கூறிவருகிறார்கள். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிவான். இது கடவுள் செயல் என்று சாத்வீக வாதிகள் போதிக்கின்றனர். ஆனால் அவர்களின் கடவுள்கள்கூட ஆயுதத்தைப் பாவித்தே அதர்மத்தை ஒழித்ததாக உள்ள கதைகளை இவர்கள் மறந்துவிடுகின்றனர். இந்துசமயப் புராணக் கதைகளை எடுத்துப் பார்த்தாலும் அதர்மத்தை அழித்து தர்மம் வெல்வதற்கு பலாத்காரமே காரணமாய் இருப்பதைக் காணலாம். இந்துமத சிவன் கையில் சூலாயுதம் இருக்கிறது. கிருஸ்ணன் கையில் சக்கராயுதம் இருக்கிறது. முருகன் கையில் வேலாயுதம் இருக்கிறது. காளி கையில் கத்தி இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த 71 வருட தேர்தல் வரலாற்றில் இருந்து நாம் தெரிந்துகொண்டது தேர்தல் மூலம் ஆளும் வர்க்கத்தில் ஆட்களை மாற்ற முடியுமேயொழிய ஆளும் வர்க்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதே. இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் தமது அனுபவங்களில் இருந்து கூறியது, “ இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அவை செயற்படும். எனவே அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது”.

சம்மட்டியின் கடைசி

சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே. எல்லா போராட்டமும் முதல் நாளில் வெற்றியை தருவதில்லை. வெற்றி தரவில்லை என்பதற்காக அது பயனற்ற போராட்டம் என்று பொருள் அல்ல. போராட்டம் வெற்றியை தராது போகலாம், ஆனால் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை. தையிட்டி போராட்டத்தை பயனற்ற போராட்டம் என்போர் கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள் இவை.

தலையணைகளை

தலையணைகளை மாற்றுவதால் தலைவலி தீருவதில்லை. ஜனாதிபதிகளை மாற்றுவதால் மக்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. எம் தலை மீது 49 பில்லியன் டாலர் கடன் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் எம்மை ஆண்டவர்களில் ஒருவர்கூட கடனாளி இல்லை. இவர்கள் சுருட்டி வைத்திருக்கும் எம் பணத்தை எப்படி மீட்பது?

நினைவஞ்சலிகள்

•நினைவஞ்சலிகள் மன்னார்குடியைச் சேர்ந்த தோழர் இராசேந்திரன் அவர்கள் காவல்துறை வேட்டையின் போது சயனைடு அருந்தி உயிர் நீத்தார். தமிழ்த்தேசிய விடுதலைக்குத் தன்னை உயிர்க்கொடை அளித்த தமிழர் பாசறை முன்னோடி தோழர் இராசேந்திரன்( எ ) சொக்கர் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

போட்டோ சாப்பிடுமா

போட்டோ சாப்பிடுமா என்று கேட்கக்கூடாது ஏனெனில் இது திராவிட பகுத்தறிவுப் படையல் 😂

காதலில் நல்லகாதல்

காதலில் நல்லகாதல் கள்ளக்காதல் எப்படி இருக்க முடியாதோ அதேபோன்று தமிழ்த்தேசியத்தில் முற்போக்கு தேசியம் பிற்போக்கு தேசியம் இருக்க முடியாது. தமிழ்த்தேசியம் என்பது தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மை. அவ்வளவுதான்.

தமிழா!

தமிழா! கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது உனது ரயில்வேயில் உனக்கு வேலை இல்லை. 90% வேலை வட மாநிலத்தவருக்கு. காஸ்மீர் எல்லையில் காவலுக்கு சென்று நீ சாக வேண்டும். ஆனால் கடலில் உன் மீனவனைக் காக்க யாரும் வருவதில்லை. வருடம் 85 ஆயிரம் கோடி ரூபா வரி நீ கட்ட வேண்டும். ஆனால் காசு கேட்டு நீ கையேந்தினாலும் உதவி கிடைப்பதில்லை. தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் நீ அதை ஆள முடியாது! உன் கைக்கு எட்டும் தூரத்தில் 2 லட்சம் தமிழர் உன் கண்முன் கொல்லப்படும்போதும் உன்னால் காப்பாற்ற முடியாது. ஏனெனில் நீ அடிமையாக இருக்கிறாய் தமிழா! இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் கிடக்கப் போகிறாய் தமிழா! மூவாயிரம் ஆண்டுக்கு மேலான வரலாறு உனக்கு உண்டு. ஆனால் அதை உணராமல் கைபர் கணவாய் வழியே ஆடு மாடு மேய்த்து வந்தவனிடம் அடிமையாகக் கிடக்கிறாயே. நீ எட்டுக் கோடி தமிழா. ஆனால் இரண்டு கோடி சிங்களவன் எப்படி உன் தொப்புள் கொடி உறவுகளை தைரியமாக கொல்ல முடிந்தது? ஏனெனில் அவன் இரண்டு கோடியாக இருந்தாலும் அவனுக்கு தனி நாடு இருக்கிறது. அவனுக்கு ஒரு அரசும் இருக்கிறது. உனக்கும் ஒரு நாடும் அதில் உன் அரசும் இருந்தால் நீயும் தலை நிமிர்ந்து வாழ முடியும் அல்லவா? உன்னைவிட வரலாறும் சனத் தொகையும் குறைந்த பிரான்ஸ் இன்று வல்லரசு. பிரிட்டன் இன்று வல்லரசு. ஆனால் நீ மட்டும் இதை உணராமல் அடிமையாகக் கிடக்கிறாயே? நீ அடிமையாக கிடப்பது கேவலம் அல்ல. மாறாக நீ அடிமையாக கிடக்கிறாய் என்பதை உணராமல் இருக்கிறாயே அதுதான் கேவலம். உன் அடிமைத்தனத்தை உணர்ந்துகொள் உன் பலத்தை அறிந்துகொள் அதன் பின்னர் கிழக்காசியாவில் ஒரு அதிசயம் நிகழ்வதை நீ காண்பாய்.

ஆகஸ்டு -10 , இன்று உலக சிங்கங்கள் தினம்.

ஆகஸ்டு -10 , இன்று உலக சிங்கங்கள் தினம். குறிப்பு - இது நாம் தமிழர் சீமானைக் குறிக்கும் அரசியல் பதிவாக உங்களுக்கு தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.🥰

பரடைஸ் ( PARADISE) படம்

பரடைஸ் ( PARADISE) படம் - மலையாளம் இயக்குனர் - சிங்களவர் தயாரிப்பு – நம்ம மணி ரத்தனம் அப்புறம் என்ன கேட்கவா வேண்டும். வழக்கம்போல தமிழினத்தை கேவலப்படுத்தி எடுத்துள்ளனர். பொதுவாக மலையாளப் படங்களில் தமிழ்நாட்டு தமிழர்களையே கேவலமாக காட்டுவார்கள். ஆனால் இப் படத்தில் இலங்கையில் உள்ள மலையக தமிழரை கேவலப்படுத்தியுள்ளனர். இப் படத்தில் மலையக தமிழரை திருடர்களாக சித்தரித்துள்ளனர். இப் படம் தடை செய்யப்படவில்லை. மாறாக அவார்ட் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் தேவர் சாதியினர் திருடர்களாக கருதப்பட்டனர் என்று இப்ப யாரும் படம் எடுக்க முடியுமா? அப்படி எடுத்தால் அடுத்த நிமிடம் தமிழ்நாடு பற்றி எரியாதா? ஆனால் தமிழ் இனத்தை திருடராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு எதிர்ப்புகூட வெளியிடப்படவில்லை. மாறாக மலையாள நடிகர் அஜித், நயன்தாரா போன்றவர்களை தூக்கி கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

ஒரு சிங்கம், நரியிடம் சொன்னது

ஒரு சிங்கம், நரியிடம் சொன்னது, “எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா. உனக்கு சில எலும்பு துண்டு தருகிறேன்” நரி ஒரு செம்மறி ஆட்டிடம் சென்று சொன்னது “சிங்கம் உன் பிரச்னை எல்லாம் தீர்த்து உனக்கும் முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது” செம்மறி ஆடும் நரியை நம்பி சென்றது. செம்மறி ஆட்டைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் செம்மறி ஆட்டின் காதுகள் அறுபட்டாலும், அது தப்பித்து விட்டது. செம்மறி ஆடு நரியிடம் சொன்னது: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது” அதற்கு நரி சொன்னது: “சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்” செம்மறி ஆட்டுக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது. மீண்டும் செம்மறி ஆட்டைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: “நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது” நரி சொன்னது: “நீ அரியாசனத்தில் வசதியாக அமர வேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்” நரி செம்மறி ஆட்டை மீண்டும் அழைத்து சென்றது. இந்த முறை, சிங்கம் செம்மறி ஆட்டை பிடித்து கொன்றது. சிங்கம் நரியிடம் சொன்னது: “பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப செம்மறி ஆட்டை அழைத்து வந்துவிட்டாயே. போய் செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா” நரி செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது. நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. சிங்கம் கோபமடைந்து கேட்டது: “மூளை எங்கே?” நரி பதிலளித்தது: “அந்த செம்மறி ஆட்டுக்கு மூளை இல்லை, மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி வந்திருக்குமா?” குறிப்பு - இந்த பஞ்ச தந்திரக் கதையை படித்ததும் ரணில் தீர்வு தருவார் என தமிழ் மக்களை அழைக்கும் சுமந்திரன் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂

முக்கணாங் கயிறுகளை

முக்கணாங் கயிறுகளை மாற்றுவதால் மாடுகளுக்கு எந்த சுகமும் கிட்டுவதில்லை. தலையணைகளை மாற்றுவதால் தலைவலி தீருவதில்லை. ஜனாதிபதிகளை மாற்றுவதால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை. தேவை முகம் மாற்றம் அல்ல. அமைப்பு மாற்றமே.

தமிழகத்தை ஆட்சிசெய்த

தமிழகத்தை ஆட்சிசெய்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30000 கோடி ரூபா. கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு 45000 கோடி ரூபா. ஆனால் தமிழக மக்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் கடன் 5லட்சம் கோடி ரூபா. இந்த கொடுமையை தமிழன் எப்போது உணர்வான்? தயாராவோம் ஆர்ப்பரித்து எழுவோம் மாண்டவர்கள் நினைவாக உறுதி கொள்வோம் செப் -1 தமிழரசன் 37வது நினைவு தினம்

70களில் நெல்லியடியில் ஒரு

70களில் நெல்லியடியில் ஒரு மனநோயாளி இருந்தார். அவர் பெயர் பத்மநாதன். அவர் எப்போதும் “ நதி எங்கே போகிறது கடலைத்தேடி. நான் எங்கே போகிறேன் சரோஜாதேவியைத் தேடி” என பாட்டு பாடுவார். அதாவது தன்னை திருமணம் செய்ய நடிகை சரோஜாதேவி வரப்போகிறார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதுபோல் இப்ப ஒருவர் சென்னையில் இருக்கிறார். அவர் முதலில் துவாரகா வருகிறார் என பாட்டு பாடினார். அடுத்து நவம்பரில் பிரபாகரன் வரப்போகிறார் என்கிறார். பாவம் பத்மநாதனுக்கு சிகிச்சையளிக்க யாரும் இருக்கவில்லை. ஆனால் இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. அதுவும் மருத்துவர்களாக இருக்கின்றனர். ஒரு மகள் லண்டனில் மருத்துவராக இருக்கிறார். இன்னொரு மகள் அவுஸ்ரேலியாவில் மருத்துவராக இருக்கிறார். மற்றவர்களுடைய வீட்டு பிள்ளைகளை |போராட்டத்திற்கு வருமாறு பாட்டுபாடிய இந்த உணர்சிக் கவிஞர் தன் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பவில்லை. மாறாக இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் சேர்த்து மருத்தவராக்கினார். ஆனால் அப் பிள்ளைகள் இன்று தம் வயதான தந்தைக்கு சிகிச்சையளிக்காமல் இருக்கின்றனர்.

இந்திய அரசிடம் அடிபணிவது

•இந்திய அரசிடம் அடிபணிவது இராஜதந்திரம் அல்ல. அது சரணாகதி. இந்திய ராணுவத்தால், • பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர் பலி • 800க்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு • கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதம் இத்தனையையும் தமிழ் மக்கள் மறக்க வேண்டும் என்று கவிஞர் காசி அனந்தன் கூறுகின்றார். இதுவரை இந்திய அரசு இதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இதுவரை எந்தவித நட்டஈடும் வழங்கப்படவில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்கிறார் காசி அனந்தன். இந்திய அரசு, 40 வருடமாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்கவில்லை. சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யவில்லை. தீர்வு எதுவும் பெற்று தரவில்லை. ஆனால் இனப்படுகொலை செய்யும் சிஙகள அரசுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. அப்படியென்றால் தமிழ் மக்கள் ஏன் மறக்க வேண்டும்? ஆனாலும் ஒரு ஆறுதல். மகிந்த ராஜபக்சா செய்த இனப்படுகொலைகளையும் தமிழ் மக்கள் மறக்க வேண்டும் என்று அவர் இன்னமும் கூறவில்லை.

ராஜதந்திரம் என்பது கல்லு கிடைக்கும்வரை

ராஜதந்திரம் என்பது கல்லு கிடைக்கும்வரை நாயுடன் பேச்சுவார்த்தை செய்வது. போராட்டம் என்பது கல்லு கிடைத்தவுடன் நாயை விரட்டியடிப்பது. சுமந்திரன் நாய்களுடன் செய்யும் பேச்சுவார்த்தை விபரங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்கிறார். பார்க்கலாம். இம்முறையாவது சொல்வதை செய்கிறாரா என்று.

செஞ்சோலையில் குண்டு வீசி

செஞ்சோலையில் குண்டு வீசி 61 அப்பாவி தமிழ் மாணவிகளை சிங்கள அரசு கொன்றது. புலிகளிடமும் விமானம் இருந்தது. வீசுவதற்கு குண்டும் இருந்தது. ஆனால் அவர்கள் ஏன் சிங்கள மாணவிகள் மீது குண்டு வீசவில்லை என்பதை சிங்களம் எப்போது உணர்ந்து கொள்ளும்?

ஒரு ரிலாக்ஸ் வீடியோ

ஒரு ரிலாக்ஸ் வீடியோ சிரிப்பதற்கு மட்டுமே சிந்திப்பதற்கு அல்ல. 😂😂

அபிவிருத்தி என்றால் என்ன?

•அபிவிருத்தி என்றால் என்ன? எம்.பி யாகி அமைச்சுப் பதவி பெறுவதன் மூலம் அபிவிருத்தி அடைய முடியுமென்றால் இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக சிங்களப்பிரதேசங்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிங்கள பிரதிநிதிகளே அதிகளவு அமைச்சு பதவிகளை இதுவரை கொண்டிருக்கிறார்கள். இனியும் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை என்பதே உண்மை. உண்மை இவ்வாறு இருக்கும்போது அமைச்சு பதவி பெறுவதால் எப்படி தமிழ் பிரதேசம் அபிவிருத்தி அடைய முடியும் என சிலர் நம்புகிறார்கள்? றோட்டு போடுவது, சிலருக்கு வேலை வாய்ப்பு பெறுவதுதான் அபிவிருத்தி என்றால் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இவை எல்லாம் கிடைத்தனவே. பேசாமல் அவர்களின் கீழ் அடிமையாக இருந்திருக்கலாமே? அபிவிருத்தி முக்கியமே. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகாரம் வேண்டும். எனவே அதிகாரப் பரவலாக்கம் செய்யாதவரை தமிழ் பிரதேசம் ஒருபோதும் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது. 1948வரை ஆங்கிலேயர் மட்டுமே எம்மை ஆக்கிரமித்து சுரண்டினார்கள். இப்போது வடக்கு கிழக்கில் இந்தியா சுரண்டுகிறது. தெற்கில் சீனா சுரண்டுகிறது. இதற்கிடையில் தன்னுடன் ஒப்பந்தம் செய் என்று அமெரிக்கா மிரட்டுகிறது. கடன் சுமையோ வருடா வருடம் அதிகரிக்கிறது. பெற்ற கடனுக்குரிய வட்டியைக் கட்டுவதற்கே கடன் வாங்க வேண்டிய நிலையில் இலங்கை அரசு இருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அரசுடன் சேர்ந்தால் அபிவிருத்தி அடைய முடியும் என பதவி வெறி பிடித்த சுயநலவாதிகளைவிட வேறு யார் நினைப்பார்கள்?

வாஜ்பேய் நல்லவரா?

•வாஜ்பேய் நல்லவரா? (16.08.24 வாஜ்பேயின் 6ம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.) வாஜ்பேய் நல்லவர். ஆனால் தவறான கட்சியில் இருந்தார் என்கிறார்கள். ஒரு நல்லவர் எப்படி தவறான கட்சியில் இருக்க முடியும்? என்று கேட்டால் அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்கிறார்கள். காட்டிக் கொடுத்தவர் எப்படியடா சுதந்திர போராட்ட வீரர் என்று அழைக்கலாம்? என்று கேட்டால் பதில் சொல்லாமல் முழிக்கிறார்கள். இதோ நீதிமன்றத்தில் வாஜ்பாய் கொடுத்த வாக்குமூலம், "எனது தந்தை பெயர் கவுரிசங்கர். நான் குவாலியர் கல்லூரியில் படித்துள்ளேன். நான் பிராமண சமூகத்தை சேர்ந்தவன்.ஆக்ரா மாவட்டம் பட்டேஸ்வர் கிராமத்தை சேர்ந்தவன். 1942 ஆகஸ்ட் 27ம் தேதி மதியம் 2 மணி இருக்கும். காகு,மகுன் என்ற இருவரும் ஊர்ச்சாவடி அருகில் வந்தனர் வனத்துறை அலுவலகத்தை உடைக்கவேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். நானும், எனது தம்பியும் பின் தொடர்ந்து சென்றோம். பாதி தூரம் சென்றதும் நின்று கொண்டோம். வனத்துறை அலுவலகம் இடிக்கப்பட்டது .உடைந்த செங்கல்கள் விழுவதைப் பார்த்தோம்.ஆடு,மாடுகளை அவிழ்த்துவிட்டனர். தடுப்புகள் உடைக்கப்பட்டது. நாங்கள் அருகில் செல்லவில்லை. காகு,மகுன் மற்றும் ஊர் மக்கள்தான் இதற்குக் காரணம்." இந்த வாக்குமூலத்திற்குப்பிறகு அந்த ஊர் என்ன கதியானது தெரியுமா? வாஜ்பாய் நீதிமன்றத்தில் ஊர் மக்களைக் காட்டிக்கொடுத்து வாக்குமூலம் கொடுத்தவுடன் பட்டேஸ்வர் கிராமத்தை போலீஸ் சுற்றி வளைத்தது. 263 வீடுகள் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டது. காகு,மகுன் ஆகிய இருவரும் இரும்புச்சங்கிலியால் கட்டி இழுத்துச்செல்லப்பட்டனர். 300 க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டுசித்தரவதை செய்யப்பட்டனர். காகு,மகுனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஊருக்கு 10,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 65 ஆண்டுகளுக்கு முன்பு அந்தத்தொகை மிகப்பெரியது. ஊர் மக்களால் கட்ட முடியவில்லை. எனவே பொதுமக்கள் மேலும் சித்ரவதை செய்யப்பட்டனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஊரில் முஸ்லிம் களோ, கிறிஸ்தவர்களோ யாரும் இல்லை. முற்றிலும் இந்து மக்கள் தான். அந்த இந்து மக்களை காட்டிக் கொடுத்தவர்தான் இந்து தலைவர் வாஜ்பேய். காட்டிக் கொடுத்ததற்கு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். கூட இருந்தவர்களை காட்டித் தரும்படி அவருக்கு சித்திரவதை செய்யப்பட்டது. அவரது மீசை மயிர்கள் தீயினால் சுடப்பட்டது. ஆனாலும் அவர் சிறைவாசத்தை அனுபவித்தார். அந்த இளைஞர் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு. அவருக்கு பாரத ரத்னா விருதும் இல்லை. அவர் இன்றைக்கும் அரச மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுகிறார்.

இருவரும் ஈழத் தமிழர்கள்.

இருவரும் ஈழத் தமிழர்கள். ஒருவர் செல்வி மேனகா. லண்டனில் இருக்கிறார். இன்னொருவர் செல்வி திரித்துஷா. தமிழ்நாட்டில் மதுரை அகதி முகாமில் இருக்கிறார். செல்வி மேனகா உலகப் பிரசித்தி பெற்ற ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்ற தெரிவு செய்யப்பட்டுள்ளார். செல்வி மேனகாவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். செல்வி திரிதுஷா தமிழ்நாட்டில் சிறந்த புள்ளிகள் பெற்று பலரின் பாராட்டைப்; பெற்றுள்ளார். ஆனாலும் தான் மருத்துவம் படிக்க விரும்பியதாகவும் தமிழ் நாட்டில் அகதிகள் மருத்துவம் படிக்க அனுமதி இல்லை என்பதால் தன்னால் தன் விருப்படி படிக்க முடியவில்லை என கூறுகின்றார். தமிழ்நாட்டில் அகதி மாணவர்கள் மருத்துவம் படிக்க அனுமதிக்கும் காலம் எப்ப வரும்? இதைப் படித்ததும் காசி அனந்தனின் இரு மகள்களும் எப்படி தமிழ் நாபட்டில் மருத்துவம் கற்றனர் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றக்கூடும். தயவு செய்து அதை அவரிடமே கேட்டு மற்ற அகதிகளும் மருத்துவம் கற்க வழி செய்யுங்கள்.

1995ம் ஆண்டு அகஸ்டு

1995ம் ஆண்டு அகஸ்டு 15ம் திகதியன்று நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த துறையூர் சிறப்புமுகாம் திருச்சி காவல் கண்காணிப்பாளாரால் சோதனை செய்யப்பட்டது. இவ்வாறான சோதனை வழக்கமாக மாதக் கடைசியில் நடைபெறுவதுதான் வழக்கம். மாறாக திடீரென இடையில் சோதனை செய்யப்பட்டால் எங்கேயோ ஏதோ பெரிய பிரச்சனை நடந்துவிட்டது என்று அர்த்தம். ஆம். அன்றும் ஜெயா அம்மையாரின் ஆட்சியையே ஆட்டம்காண வைத்த சிறையுடைப்பு சம்பவம் ஒன்று நடந்து விட்டது. அதாவது வேலூர் கோட்டை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பி விட்டார்கள் என்பதே அந்த சம்பவம். பல நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய பொலிசாரின் 24 மணிநேரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பிவிட்டனர் என்பது ஆச்சரியம் எனில் அதைவிட ஆச்சரியம் அவர்கள் சுரங்கம் தோண்டி தப்பிவிட்டனர் என்ற செய்தியாகும். கியூ பிரிவு உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் இருந்து சென்று சுரங்கத்தை வீடியோ எடுத்து காண்பிக்கும்வரை யாருமே அதை நம்பாமல் இருந்தனர். எனக்கும்கூட எப்படி சுரங்கம் தோண்டியிருப்பார்கள்? எப்படி தப்பியிருப்பார்கள்? யார் யார் தப்பினார்கள்? என்ற கேள்விகள் தோன்றின. நானும் வேலூர் கோட்டையில் ஒரு வருடம் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். எனவே எனக்கு அந்த முகாம் சூழல் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தவர்கள் பலரை எல்லாம் தெரியும். ஆனால் நான் எவ்வளவோ முயன்றும் சிறையுடைப்பு பற்றிய மேலதிக விபரங்களை அப்போது அறிய முடியவில்லை. தென்னிந்திய திரைப்படத்துறையினர் மயிர்கூச்செறியும் மர்மங்கள் நிறைந்த வேலுர் சிறையுடைப்பை ஏன் இன்னும் படமாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது

சைலேந்திரபாபு எனும்

சைலேந்திரபாபு எனும் காவல்துறை அதிகாரியால் தோழர் நாகராசன் சுட்டுக்கொல்லபட்டார். தோழர் நாகராசனை நினைவு கூர்வதென்பது அவரின் போராட்டத்தை, அவரின் நோக்கத்தை வென்றெடுப்பதே. தோழரின் வழியில் தமிழ்த்தேசம் படைக்க உறுதியேற்போம்

இக் கட்சிகள் ஈழத் தமிழ்

இக் கட்சிகள் ஈழத் தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதை எதிர்க்கிறார்களா? அல்லது ,குறிப்பிட்ட இடத்தில் வீடு கட்டப்படுவதை எதிர்க்கிறார்களா? அகதிகளுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கி குளிர்காய முனைகிறதா தமிழக திராவிட அரசு ?

செய்தி – தமிழ் மக்களுடன்

செய்தி – தமிழ் மக்களுடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் என்று- நாமல் ராஜபக்சா தெரிவிப்பு அடேய் நாமல்! உன்னைப் பற்றி தெரியாதாடா!! 😂😂

ஜனாதிபதி தேர்தலில்

ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் அணுகுமுறையே சரியானது என இந்திய தூதர் தம்மிடம் கூறியதாக சுமந்திரன் தெரிவிப்பு ஜனாதிபதி தேர்தலில் தம் நிலைப்பாடு என்ன என்பதை தமிழரசுக்கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. அப்படியிருக்க இது சரியான அணுகுமுறை என்று இந்திய தூதர் எப்படி கருதுகிறார்? சுமந்திரன் உருட்டு ?

தங்கலான்

• தங்கலான் நல்ல அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டிய கதை இயக்குனர் ரஞ்சித் சொதப்பியது ஏமாற்றமாக உள்ளது. விக்ரம் இன் அசுரத்தனமான நடிப்பும் வீணாகிவிட்டது. தங்கலான் சொதப்பலான் ஆகி விட்டது.

பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை!

பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை! அவர் சுமந்து சென்ற வெடி பொருள் 50 கிலோ வுக்கு மேல் இருக்கும். ஆனால் அவரின் எடையோ 60 கிலோதான். சிறு படகில் சென்றால்கூட ராடரில் தெரிந்துவிடும்; என்பதால் இந்த வெடி பொருட்களுடன் அவர் நீந்தி சென்ற தூரம் கிட்டத்தட்ட 17 மைல்கள் என்கிறார்கள். அவர் எட்டு மணி நேரம் நீந்தி சென்று தாக்குதலை மேற்கொண்டார் என்று கூறுகிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தான் மரணமடையப் போகிறேன் என்று தெரிந்தும் அவரது கால்கள் சோரவில்லை. கைகள் செயல் இழக்கவில்லை. இலக்கை அடைந்தார். 326 அடி நீளம் , 51 அடி அகலம். 6300 தொன் எடை கொண்ட அதி நவீன ராடர் பொருத்தப்பட்ட போர்க்கப்பலை முழ்கடித்தார். இதைப் படிக்கும்போது இந்த வீர தீரச் செயலை செய்தவர் ஒரு இளைஞனாக இருப்பான் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால் ஆண்களே வியக்கும் இந்த சாதனையைப் புரிந்தவர் ஒரு பெண். அவர் பெயர் அங்கைய-கண்ணி. அப்போது அவரின் வயது 21. பெண்கள் பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் என்ற கதையே பெரும்பாலும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் பலமிக்கவர்கள் என்பதை கூறும் கதைகள் தந்திரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. இனி நாம் அங்கைய-கண்ணிகளின் கதைகளை கூறுவோம். I

கண்ணீர் அஞ்சலிகள்

•கண்ணீர் அஞ்சலிகள் பெயர் விராஜ் மெண்டிஸ் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் அனைத்துலக மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாட்சியங்கள் பலவற்றை வெளிக்கொணர்ந்தவர் நடந்தது இனப்படுகொலை என தீர்ப்பு வழங்கிய பெர்லின் தீர்ப்பாயத்தின் முக்கிய செயற்பாட்டாளர். தமிழத்தேசிய ஆதரவாளரான இவரின் மறைவு பேரிழப்பாகும். தமிழ் மக்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்.

கடவுள் - பக்தா! உன் பக்தியை

கடவுள் - பக்தா! உன் பக்தியை மெச்சினேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். அப்பாவி தமிழன் - கடவுளே! யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவரை ரோடு வேண்டும். அதில் சென்று கனடாவில் அகதி அந்தஸ்து பெற வேண்டும். கடவுள் - பக்தா! கனடா போவதற்கு கடலில் ரோடு போடுவது கஷ்டம். வேறு ஏதாவது வரம் கேள். அப்பாவி தமிழன் - பொதுவேட்பாளர் ஏன் என்ற கொள்கை விளக்கத்தை பொதுவேட்பாளர் அரியனேந்திரம் அவர்களிடமிருந்து கேட்க வேண்டும். கடவுள் - கனடாவுக்கு சிங்கிள் ரோட் போதுமா அல்லது டபிள் ரோட் வேண்டுமா? அப்பாவி தமிழன் - என்ன கடவுளே, பொதுவேட்பாளர் ஏன் என்பது பொதுவேட்பாளருக்கே தெரியாதா? 😂

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக முதன் முதலில் போராட்டத்தை ஆரம்பித்தவர் ஈழத் தமிழர் சிவானந்தம் அடிகள்

இலங்கையில் தமிழர் பகுதியான

இலங்கையில் தமிழர் பகுதியான மன்னார் மற்றும் பூநகரி இந்திய முதலாளி அதானிக்கு சிங்கள அரசு வழங்கியுள்ளது. இது குறித்து தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரம் அவர்கள் கண்டனம் தெரிவிப்பாரா?

கிளர்ச்சி நாயகன் "

கிளர்ச்சி நாயகன் "டீல்" நாயகனாகிய கதை என்ன டொக்டர் இதெல்லாம் என்று கேட்டால் தான் இப்ப அரசியல்வாதி ஆகிவிட்டேன் என்கிறார். சரி அதென்ன அரசியல் என்று கேட்டால் அது ரகசியம் சொல்ல மாட்டேன் என்கிறார். அப்படியென்றால் இவரது அரசியல் மக்களுக்கானது இல்லையா? பாவம் தமிழ் மக்கள். இன்னும் என்னெனன் கூத்தை எல்லாம் காண வேண்டி வருமோ?

உலக புகைப்பட தினம் - 19.08.24

எல்லோரும் உலகத்தை பார்ப்பார்கள் ஆனால் அந்த உலகம் இவர்களைத் திரும்பிப் பார்த்தது ( உலக புகைப்பட தினம் - 19.08.24)

மலையாளி தன்னை மலையாளியாக

மலையாளி தன்னை மலையாளியாக உணர்வதை “மலையாள இனவெறி” என்று கூறாதவர்கள், கன்னடன் தன்னை கன்னடனாக உணர்வதை “கன்னட இனவெறி” என்று கூறாதவர்கள், தமிழன் தன்னை தமிழனாக உணர்வதை மட்டும் “தமிழ் இனவெறி” என்று கூறுகிறார்கள். ஒரேயொருமுறை தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்தால் போதும். அது எப்போது நிகழும்?

2009ல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால்

2009ல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்தனர். அப்போது வயது மூப்பு காரணமாக பேசிக் கொண்டிருக்கும்போதே கலைஞர் கருணாநிதி அடிக்கடி உறங்கியிருக்கிறார். உறக்கத்தில் இருந்து விழித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி “பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?” இவ்வாறு மொத்தம் நான்கு தடவை "பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?" எனக் கேட்டார். இவ்வாறு தமிழ்த்தேசியகூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். கலைஞரின் ஆழ் மனதில் இக் கேள்வி ஏன் இருந்துள்ளது? அவர் செய்த துரோகம் அவரை இறுதிவரை துரத்தியதா?

11ம் ஆண்டு நினைவஞ்சலி!

11ம் ஆண்டு நினைவஞ்சலி! பெயர் - தோழர் உத்ராபதி தாய் தந்தையர் - ரங்கநாதன் , சரசுவதியம்மாள் இடம் - அரியலூர் மாவட்டம் ,ஆண்டிமடம் வட்டம் சிலுவைச்சேரி கிராமம். அமைப்பு - தமிழ்நாடு விடுதலைப்படை வழக்குகள் - குள்ளஞ்சாவடி காவல் நிலைய தாக்குதல், பூம்புகார் ராம் இறால் பண்ணை மீதான தாக்குதல், மயிலாடுதுறை டிவி டவருக்கு குண்டு வைத்தது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் டவருக்கு குண்டு வைத்தது, ஆண்டிமடம் காவல்நிலையத்தை தாக்கி ஆயுதங்களை சூறையாடியது சிறை வாழ்க்கை - 10 ஆண்டுகள் மறைவு - 24.08.2013

ஈழப் போராட்டத்தில்

ஈழப் போராட்டத்தில் ஒரு இயக்கம் செய்ததை இன்னொரு இயக்கம் செய்ததாக உரிமைகோரி பிரசுரம் வெளியிட்டதை அறிந்துள்ளேனே தவிர ஒருபோதும் ஒரு இயக்கம் செய்ததை இன்னொரு இயக்கம் கண்டித்து பிரசுரம் வெளியிட்டதாக நான் அறியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தோழர் தமிழரசன் மருதையாற்றில் வெடிகுண்டு வைத்தபோது அதனைக் கண்டித்து மகஇக அமைப்பு தமிழ்நாடு எங்கும் போஸ்டர் ஒட்டியது. ஒரு புரட்சிகர அமைப்பு செய்த தாக்குதலை இன்னொரு புரட்சிகர அமைப்பு கண்டித்து போஸ்டர் ஒட்டியது அப்பட்டமான காட்டிக் கொடுப்பாக எனக்கு தோன்றியது. நான் இது குறித்து ஆச்சரியத்துடன் தோழர் தமிழரசனிடம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே “பொலிஸ் தங்களை கைது செய்துவிடுமோ என்ற பயத்தில் செய்துள்ளார்கள்” என்றார். தமிழ்நாடு விடுதலைப்படை செய்ததாக நீங்களே சம்பவம் நடந்த இடத்தில் போஸ்டர் ஒட்டி உரிமை கோரியுள்ளீர்கள். அப்படியிருக்க இவர்களை எப்படி பொலிஸ் கைது செய்யும் என நான் கேட்டேன். “அவர்கள் அப்படித்தான். இது குறித்து பெரிதாக எதுவும் யோசிக்க தேவையில்லை” என்றார் தோழர் தமிழரசன். நாம் தமிழ்நாட்டில் முதன் முதலாக தொடர்பு கொண்ட அமைப்பு தோழர் தமிழரசனின் அமைப்பே. அப்போது தோழர் தமிழரசன் “தமிழ்நாட்டில் பல புரட்சிகர அமைப்புகள் இருக்கின்றன. நீங்கள் எல்லாவற்றுடனும் தொடர்பு கொள்ள வேண்டும்” எனக்கூறி அவற்றின் தொடர்பு விபரங்களை தந்தார். அதன்படி மகஇக தலைவர் மருதையனை சென்னையில் சந்தித்தேன். அப்போது மருதையன் தாங்கள் மட்டுமே உண்மையான புரட்சிகர அமைப்பு. மற்றவர்கள் எல்லாம் போலிகள். அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் தாம் தொடர்பு வைக்க மாட்டோம் என்றார். அவர் தோழர் தமிழரசனுடனான எமது உறவைத்தான் கூறுகின்றார் என்பதை புரிந்துகொண்ட நான் "அவர் கூறித்தான் உங்களை சந்திக்க வந்தேன். உங்களுக்காக அவருடனான உறவை நாம் முறித்துக்கொள்ள மாட்டோம் " எனக்கூறிவிட்டு எழுந்தேன். அப்போது மருதையன் “சரி பரவாயில்லை. காலப்போக்கில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்” என்று கூறிவிட்டு தொடர்ந்து தொடர்பு கொள்ள சம்மதித்தார். ஆனால் , தமிழத்தேசிய விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசனே உண்மையான புரட்சியாளர் என்பதை வரலாறு இன்று நிரூபித்துவிட்டது. திமுக கும்பலை ஆதரிக்கும் மருதையனின் இன்றைய நிலை எனக்கு ஆச்சரியம் தரவில்லை.

கருணாநிதி மனைவி தயாளு

கருணாநிதி மனைவி தயாளு அம்மையாரும் மகிந்த ராஜபக்ச மனைவி சிராந்தி அம்மையாரும்! கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவி முதலாளிகளில் ஒருவர். கலைஞர் டிவிக்கு வந்த கோடிக் கணக்கான ரூபா பற்றி விசாரணையில் கேட்ட போது தனக்கு தெரியாது என்று பதில் கூறினார். ஒரு முதலாளிக்கு தெரியாமல் எப்படி அவர் கம்பனிக்கு பணம் வந்தது என்று கேட்டபோது தனக்கு மறதி நோய் என்று கூறினார். ஊழல் செய்துவிட்டு அதுபற்றிய விசாரணை வந்தபோது கொஞ்சம்கூட கூச்சமின்றி தனக்கு மறதி நோய் இருப்பதாக பொய் கூறினார். இது குறித்து கலைஞர் கருணாநிதியும் வெட்கப்படவில்லை. அவர் கட்சி தி.மு.க வும் வெட்கப்படவில்லை. அதுபோல் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி அம்மையாரும் தாஜீதீன் கொலை பற்றிய விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். தனது பொறுப்பில் இருந்த வாகனங்கள் எப்படி கொலைக்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். அதுமட்டுமன்றி விசாரணை முடிவில் கையொப்பமிடுமாறு கோரியபோது அவர் தனக்கு சிங்களம் தெரியாது என்று கூறினார். தனக்கு சிங்களம் தெரியாது என்று பொய் கூறுவதையிட்டு சிராந்தி அம்மையார் கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை. அதேபோல் சிங்களம் தெரியாது என்று தன் மனைவி பொய் கூறியதையிட்டு மகிந்த ராஜபக்சவும் வெட்கப்படவில்லை. தாய் தந்தையும் இப்படியென்றால் மகன் ரோகித ராஜபக்சவோ இன்னும் ஒருபடி மேலேபோய் தாஜீதீன் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறினார். தங்கள் கணவன்மார் பதவியில் இருக்கும்வரை இந்த மனைவிமாருக்கு எந்த நோயும் வருவதில்லை. பதவி போனபின் விசாரணைக்கு வா என்று அழைத்தவுடன் திடீரென்று மறதி நோய் வருகிறது. சிங்களம்கூட மறந்து விடுகிறது. பாவம் தாஜீதீன் குடும்பம். ரணில் அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் என்று நம்பினார்கள். ஆனால் ரணில் அரசோ மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தை காக்கவே பாடுபடுகின்றது! குறிப்பு – தான் விரும்பிய பெண் தன்னை விரும்பாமல் தாஜீதீனை விரும்புகிறார் என சந்தேகம் கொண்டு மகிந்தவின் மகன் ரோகித அவரை சிராந்தி அம்மையாரின் பொறுப்பில் இருந்த வாகனத்தில் உயிருடன் கொளுத்தி கொன்றார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அண்மையில் கூறியிருந்தார்.

கீழே உள்ள படத்தில்

கீழே உள்ள படத்தில் இருப்பவர்கள் மாறன் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் தயாநிதி மாறன் கலாநிதி மாறன் மற்றும் அவர்களது தாயார். 80களில் அண்ணாசாலையில் சிறிய கடை ஒன்றில் பூமாலை வீடியோ வியாபாரம் செய்தவர்கள் இவர்கள். இன்று ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் வரிசையில் இவர்கள் இடம் பெற்றுள்ளனர். கலைஞரின் உறவினர்கள் என்பதைவிட வேறு என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு? கோடிக்கணக்கான பணத்துக்கு அதிபதிகளாக இருக்கும் இந்த சகோதரர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிறுவனங்கள் என்னென்ன தெரியுமா ? வேலூர் முரசு ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி கோவை முரசு ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி கே.எஸ் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி கல் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி, ஆர்எம்அர் ரமேஷ் சேலம் முரசு ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி கல் கேபிள்ஸ் ப்ரைவெட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன், கே.சண்முகம் சன் அகாடமி ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் உதயநிதி, கலாநிதி மாறன், எஸ்.செல்வம், கே.சண்முகம் ஜெமினி டிவி ப்ரைவெட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன், ஏ.மனோகர் ப்ரசாத், பி.கிரண், காவேரி கலாநிதி கல் கம்யூனிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டேட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி கல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (மெட்றாஸ்) ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன், எஸ்.செல்வம் மற்றும் காவேரி கலாநிதி கேபிகே பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி குங்குமம் நிதியகம் ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம் உதயா டிவி ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம் குங்குமம் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம் நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் கே.சண்முகம் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் எஸ்.செல்வம் சன் டைரெக்ட் டிவி ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி டிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிடெட் இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத் எச்.எஃப்.ஓ என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத் டிகே என்டர்ப்ரைசஸ் ப்ரைவேட் லிமிட்டெட் இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் ப்ரியா தயாநிதி சன் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் ட்ரஸ்டிகள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி எஸ் & எஸ் டெக்ஸ்டைல்ஸ் செல்வி செல்வம், காவேரி கலாநிதி, ப்ரியா தயாநிதி எம்எம்எஃப் ட்ரஸ்ட் ட்ரஸ்டீஸ் கலாநிதி மாறன் மற்றும் மல்லிகா மாறன் கல் ரேடியோஸ் இயக்குநர்கள் கலாநிதி மாறன் சவுத் ஏஷியா எப்.எம். இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி இதற்குப் பிறகு மேலும் பல நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார்கள் சகோதரர்கள். சன் பிக்சர்ஸ் .... அவர்கள் தொடங்கிய தொழில் நிறுவனம்தான் ஸ்பைஸ் –ஜெட் விமான சேவை... ஹைதராபாத் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் டீமை பல்லாயிரம் கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள்.

புலிகள் இருந்தவரை

புலிகள் இருந்தவரை புலிகள் மீதான விமர்சனம் என்பது மாற்று கருத்து என்ற அரசியல் தன்மை கொண்டிருந்தது. ஆனால் புலிகள் அற்ற நிலையில் புலிகள் மீதான விமர்சனம் என்பது எதிரிகளுக்கு உதவுவதாகவே இருக்கின்றது. எதிரிக்கு உதவுவது துரோகம் ஆகும்.

இந்திய தூதரும்

•இந்திய தூதரும் கிழக்கு மாகாண தமிழரசுக்கட்சி வெங்காயங்களும் இந்திய தூதரை சந்தித்த கிழக்கு மாகாண தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தரும்படி கேட்கவில்லை. மாறாக கிழக்கு மாகாணத்தில் ஒரு இந்திய தூதராலயம் அமைக்கும்படி கேட்டுள்ளனர். இலங்கையில் ஏற்கனவே கொழும்பு, கண்டி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் என நான்கு இடத்தில் இந்திய தூதராலயம் இருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதராலயத்தால் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மாறாக தமிழ்த் தேசிய செயற்பாடுகளுக்கு எதிரான சதி வேலையையே யாழ் இந்திய தூதர் மேற்கொண்டு வருகிறார். கல்முனையில் கலாச்சார மண்டபம் அமைத்து தருமாறு அம்பாறை எம்.பி கலையரசன் கேட்டுள்ளார். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபம் யாழ் மாகர சபையிடம் ஒப்படைக்கப்படவில்லை. சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் புத்த பிக்குகளே நிகழ்ச்சிகள நடத்தி வருகின்றனர். அப்படியிருக்க கிழக்கு மாகாணத்தில் எதற்கு கலாச்சார மண்டம்? அங்கும் பிக்குகள் நிகழ்ச்சி நடத்தவா? ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உண்டு. அதில் தமது நிலைப்பாடு என்ன என்பதை தமிழரசுக்கட்சி இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்திய தூதரிடம் சென்று தூதராலயம் அமைக்கும்படி கோருகின்றனர். தமிழினத்தின் சாபக்கேடுகள் இவர்கள்.

ஈழப் போராட்டத்தின்

ஈழப் போராட்டத்தின் முதல் தியாகி சிவகுமாரன் பிறந்த நாள் (26.08.1950 – 05.06.1974) அவர் தனது 24 வயதில் விதையானார். அவரில் இருந்து பல்லாயிரம் போராளிகள் முளைத் தெழுந்தார்கள். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்று அவரின் வயது 74 ஆக இருக்கும். மற்றவர்கள் போல் அவரும் ஏதாவது ஒரு வெளிநாடு சென்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். அல்லது பாராளுமன்ற அரசியலில் புகுந்து ஒரு எம் பி யாகவும் ஆகியிருக்கலாம். ஆனால் அவரோ தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி தன் வாழ்வை அர்ப்பணித்தார். உலகில் கொடியது இன விடுதலைக்காக 24 வயதில் மரணமடைவது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தன் மகனின் உடலை 24 வயதில் பிணமாக பார்க்கும் தாயின் நிலையே கொடியது என நான் கருதுகிறேன். இந்த கொடுமையை சிவகுமாரனின் தாயார் அனுபவித்தார். அவர் அனுபவித்த அந்த கொடுமையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இப்போது எனது கவலை எல்லாம் இந்த தியாகிகளைப் பற்றி எழுதவில்லையே என்பது அல்ல. தியாகி சிவகுமார் துரையப்பாவை துரோகி என்றார். அவரை கொல்ல பலமுறை முயன்றார். ஆனால் இப்போது சிலர் துரையப்பாவை தியாகி ஆக்கிறார்கள். இவர்கள் இனி விரைவில் தியாகி சிவகுமாரனை துரோகியாக்குவார்கள். ஏனெனில் இது தியாகிகள் துரோகிகளாகவும் துரோகிகள் தியாகிகளாகவும் ஆக்கும் காலம். .

செய்தி – மலையக தமிழ் பாராளுமன்ற

செய்தி – மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருவர் தொலைக்காட்சி நிகழ்வில் சண்டை. "பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" - லெனின்

ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை

ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆளும் வன்முறைக் கருவியே அரசு என்றும் அடக்கி ஆளப்படும் வர்க்கம் அடக்கி ஆளும் வர்க்கத்தை தூக்கி எறியும் வன்முறை நிகழ்வே புரட்சி என்றும் காரல் மார்க்ஸ் கூறினார். ஆனால் இன்று தம்மை மார்க்சியவாதிகளாக சொல்லிக் கொள்ளும் சிலர் தேர்தல் பாதையில் பயணித்து வன்முறையின்றி புரட்சியை செய்ய முடியும் என கூறுகின்றனர். இவர்கள் பற்றி லெனின் கூறுவது என்னவென்றால், "முதலாளித்துவ வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையை பெற வேண்டும் அதற்குப் பின் தான் அது அதிகாரத்தை பெற வேண்டும் என்று கயவர்கள் அல்லது முட்டாள்கள்தான்; கூறுவார்கள். வர்க்கப் போராட்டம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையில் பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும்" இலங்கையில் தேர்தலில் பங்கெடுப்பது பற்றி தோழர் சண் இவ்வாறு கூறுகிறார் “இன்று உள்ள நவ காலனித்துவ பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்த கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்துக்கு வந்தாலும் முதலாளத்துவத்தினதும் ஏகாதிபத்தியர்தினதும் காவல் நாயாகவே செயற்படும். இந்த அடக்கு முறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சினையையும் தீர்க்க முடியாது” சரி. இதைப் படித்ததும் தம்மை மார்க்சியவாதிகளாக கூறிக்கொள்ளும் ஜேவிபி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியினர் தேர்தலில் எப்படி பங்கெடுக்கின்றனர் என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும். முன்னிலை சோசலிசக் கட்சியினரைப் பொறுத்தவரையில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தேர்தலில் பங்கெடுப்பதாக தோன்றவில்லை. மாறாக தமது கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்குரிய ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர் என்றே தோன்றுகிறது. ஆனால் ஜேவிபியைப் பொறுத்தவரையில் அவர்கள் தாம் இம்முறை அதிகாரத்தை கைப்பற்றிவிட முடியும் என்றே நம்புகின்றனர். ஜேவிபி உண்மையில் புரட்சியை நோக்கமாகக் கொண்டிருந்தால் அவர்கள் தேர்தல் பாதையில் அதிகாரத்தைக் கைப்பற்ற முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் ஒருபோதும் அனுமதிக்காது. மாறாக முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் ஜேவிபி அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதித்தால் ஜேவிபியும் ஆளும் வர்க்கத்தில் ஒருவராக மாறிவிட்டது என்று அர்த்தமாகும்

அமிர்தலிங்கம் 1989ல் கொழும்பில்

அமிர்தலிங்கம் 1989ல் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். 2009 வரை புலிகள் இருந்தபோது திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்கள் அமிர்தலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தவில்லை. தற்போது யாழ்ப்பாணம் வந்து அமிர்தலிங்கம் அவர்களுக்கு வீரமணி நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். அதேவேளை 2009ல் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாயக்காலுக்கு அவர் இதுவரை வந்து அஞ்சலி செலுத்தவில்லை.

கடந்த வருடம் இதே நாளில்

கடந்த வருடம் இதே நாளில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டை பேரினவாதிகள் முற்றுகையிட்டு அச்சுறுத்தினார்கள். இந்த வருடம் தேர்தல் பகிஸ்கரிப்பு மூலம் சிங்கள அரசுக்கு உதவுவதாக இந்திய அரசின் விசுவாசிகள் கஜேந்திரகுமார் மீது குற்றம் சாட்டுகின்றனர். எவனைப் பார்த்து எம் எதிரிகள் எரிச்சல் அடைகின்றனரோ அவன் எம் இனத்திற்கு உண்மையாக இருக்கிறான் என்று அர்த்தம்

ஊழல் வழக்கில் பொலிசார்

ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்ய சென்றபோது “ஐயோ கொல்லுறாங்க காப்பாத்துங்க” என்று அலறினார் கலைஞர் மரணத் தறுவாயில் சிவகுமாரன் கூறிய இறுதி வார்த்தைகள்” நான் மீண்டும் தமிழனாக பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” கலைஞரை “உலகத் தமிழின தலைவர்” என்கிறார்கள். போராளி சிவகுமாரனை “பயங்கரவாதி” என்கிறார்கள். இப்ப கூறுங்கள் யார் தமிழின தலைவர்? குறிப்பு - இன்று தியாகி சிவகுமாரனின் 74 வது பிறந்த தினம்.

தமது கையால் தமது சாப்பாட்டை

தமது கையால் தமது சாப்பாட்டை உண்ண முடிந்தவர்களால் தமது கையால் தமது குண்டியை கழுவ முடிந்தவர்களால் தமது கையால் தமக்கு குடை பிடிக்க முடியாதா? அதுவும் பதவி வந்தவுடன் தமக்கு குடை பிடிக்கவென சம்பளத்திற்கு இன்னொரு ஆளை நியமிக்கத்தான் வேண்டுமா? இதை “கௌரவம்” என நினைக்கிறார்களே! - இவர்களுக்கு இது “அசிங்கம்” என எப்படி புரிய வைப்பது? குறிப்பு- குரங்குகளுக்கு அருகில் எமது தலைவர்களின் படத்தை போட்டு குரங்குகளை நான் கேவலப்படுத்தி விட்டதாக தயவு செய்து யாரும் என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.

பட்டி தொட்டி எங்கும்

பட்டி தொட்டி எங்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை பரவும் தோழர் தமிழரசன் புகழ் கொன்று புதைத்தால் ஆயிரம் ஆயிரமாய் முளைத்து எழுவோம் துண்டு துண்டாய் வெட்டி எறிந்தால் பொங்கும் கடல் அலைபோல் மீண்டும் மீண்டும் எழுவோம் செப் -1 தோழர் தமிழரசன் 37வது நினைவு தினம்.

செங்கொடியை நினைவில் கொள்வோம்!

•செங்கொடியை நினைவில் கொள்வோம்! இவர் தேர்ந்தெடுத்த பாதை குறித்து விமர்சனம் இருக்கலாம் ஆனால் இவரின் அர்ப்பணிப்பு குறித்து யாருக்கும் விமர்சனம் இருக்க முடியாது. மூன்று தமிழர் உயிர் காக்க தன் உயிரைக் கொடுத்தவர் வாழ வேண்டி வயதில் சாவை விரும்பி ஏற்றவர். தன் உடல் கருகி உயிர் போகும் நேரத்தில்கூட தன்னைக் காப்பாற்றும்படி அவர் கோரவில்லை தன் உடலை வைத்து 3 பேரின் உயிரையும் காப்பாற்றும்படியே கேட்டார். அவர் அர்ப்பணிப்பு மகத்தானது. உலகில் தமிழ் இனம் உள்ளவரை வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும். இது உறுதி! குறிப்பு - செங்கொடியின் 13 வது நினைவு தினம் 28.08.2024

மற்றவர்கள் போல் தானும்

மற்றவர்கள் போல் தானும் வாழ வேண்டும் என்று தோழர் தமிழரசன் விரும்பியிருந்தால் படித்து பட்டம் பெற்று நல்ல வேலையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அல்லது, தோழர் தமிழரசன் கொஞ்சம் தந்திரமாக கம்யுனிசம் பேசியிருந்தால் இன்று திமுக விடம் நாலு சீட்டும் 25 கோடி ரூபா பணமும் பெற்று வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் உண்மையாகவே தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு தமிழ்த்தேசிய விடுதலையை முன்னெடுத்தார். அதனால் சதி செய்து கொல்லப்பட்டார். அவரைக் கொன்றால் தமிழ்த்தேசிய விடுதலையை தடுத்துவிட முடியும் என இந்திய அரசு நினைத்தது. ஆனால் இன்று தோழர் தமிழரசனை மறுத்துவிட்டு யாரும் தமிழ்த்தேசியம் பேசவிட முடியாது. அந்தளவுக்கு தோழர் தமிழரசன் வளர்ந்து நிற்கிறார். செப் -1 தோழர் தமிழரசன் 37வது நினைவு தினம்

வாழை

• வாழை சாதிப் பிரச்சனைக்கு படிப்பு மட்டுமே தீர்வு என்று பலரும் படமெடுத்துக் கொண்டிருந்த நிலையில் அடிக்கு அடி மட்டுமே தீர்வாகும் என படம் எடுத்தவர் மாரி செல்வராஜ் அந்தளவில் எனக்குள் பிரமிப்பை எற்படுத்தியவர் இயக்குனர். மாரி செல்வராஜ். அவரது வாழை படம் குழந்தை தொழிலாளி சுரண்டப்படுவதை பேசுகிறது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் அவரும் சிறுவர்களை குறைந்த ஊதியம் கொடுத்து நடிக்க வைத்து கோடிக்கணக்கான ரூபா சம்பாதித்துள்ளார். நாளை இந்த படத்தில் நடித்த சிறுவன் தன்னை மாரி செல்வராஜ் சுரண்டிய கதையை படம் எடுத்தால் என்னவாகும்?

அன்றும் இன்றும் ஈழத் தமிழர்

அன்றும் இன்றும் ஈழத் தமிழர் மீதான உறுதியான ஆதரவை வழங்கி வருபவர் சுப்பக்கா என்று அழைக்கப்படும் சுப்புலட்சுமி ஜெகதீசன். பதவியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கி வந்தவர் அவர். ஈழத் தமிழரை ஆதரித்தமையினால் பத்து மாதங்கள் தடா சிறையில் வாடியவர். இன்று அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி யிருந்தாலும் தனது ஈழத் தமிழர் மீதான ஆதரவை கைவிடவில்லை. ஈழத் தமிழ் அகதி மாணவர்களின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார். அவரின் உணர்வுகளுக்கு பாராட்டுகள்.

பகத் சிங் பாராளுமன்றத்திற்கு

பகத் சிங் பாராளுமன்றத்திற்கு குண்டு வீசினார். தாம் யாருக்கும் தீங்கிழைப்பதற்காக குண்டு வீசவில்லை என்றும் ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே அதனை மேற்கொண்டதாக அவர் கூறினார். ஒரு தாக்குதல் நடவடிக்கையானது ஆயிரம் பொதுக்கூட்டங்களுக்கு ஒப்பானது என்று மாபெரும் ஆசான் மாவோ கூறினார். அதனால்தான் பகத் சிங் குண்டு வீசியது ஒரு சாகச நடவடிக்கை என்றோ அல்லது புரட்சிகர நடவடிக்கை இல்லை என்றோ எந்தவொரு புரட்சியாளரும் கூறியதில்லை. ஆனால் தோழர் தமிழரசன் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளை சாகச நடவடிக்கை என்றும் அது புரட்சி அல்ல என்றும் சில போலிப் புரட்சிவாதிகள் கூறுகின்றனர். இவர்கள் உலகில் நடக்கும் எல்லா போராட்டத்தையும் ஆதரிப்பார்கள். ஆனால் தோழர் தமிழரசனை மட்டும் ஆதரிக்க மாட்டார்கள். ஏனெனில் தோழர் தமிழரசன் தமிழ்த்தேசிய விடுதலைக்காக போராடியதே காரணம். ஆரியமும் திராவிடமும் மட்டுமன்றி இந்த போலி புரட்டுவாதிகளும் தமிழ்த் தேசிய விடுதலையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். செப் -1 தோழர் தமிழரசன் 37வது நினைவு தினம்

காணமல் போதல் கொடுமை

காணமல் போதல் கொடுமை என்றால் அதைவிடக் கொடுமையானது அவர்களை தேடி அலைவது. அந்த கொடுமையை 15 ஆண்டுகளாக எமது உறவுகள் அனுபவித்து வருகின்றனர். இந்த கொடுமையை அவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அனுபவிக்கப் போகின்றார்கள்? இந்த தேடுதலில் தங்கள் உறவுகள் குறித்து ஒரு ஓற்றைச் சொல்லைக்கூட அறியாமல் மாண்டுபோகிறார்களே அவர்களின் வலியை எப்படி உரைப்பது? இவர்கள் குறித்து அக்கறை அற்று இருக்கும் இந்த அரசை நொந்து கொள்வதா? அல்லது இந்த அரசை தட்டிக் கேட்காமல் இருக்கும் எமது தலைவர்களை நொந்துகொள்வதா? ஆனாலும் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தேடும் முயற்சியை கைவிடவில்லை. தங்கள் முயற்சிக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் கைவிடவில்லை. குறிப்பு - 30.08.2024 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.

பாலகுமார் முள்ளிவாய்க்காலில்

பாலகுமார் முள்ளிவாய்க்காலில் தன் மகனுடன் சரணடைந்தார். அவர் உயிரோடு வைக்கப்பட்டிருந்த படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால் பாலகுமார் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. தற்போது அவர் பெயரும் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்- 30.08.2024

தோழர் தமிழரசனும் தோழர் நெப்போலியனும்

•தோழர் தமிழரசனும் தோழர் நெப்போலியனும் தோழர் நெப்போலியன் ஈழத்தில் கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டவர். அவரின் இயற் பெயர் மனோகரன் 1984ல் தோழர் தமிழரசன் பெண்ணாடத்தில் நடத்திய மாநாட்டில் எமது அமைப்பின் சார்பில் தோழர் நெப்போலியன் கலந்துகொண்டார். தோழர் நெப்போலியன் கேட்டுக்கொண்டதற்கிணங்க எமது அமைப்பு தோழர்களுக்கு மலையாளப்பட்டி என்னும் இடத்தில் தோழர் தமிழரசன், புலவர், சுந்தரம் ஆகியோர் மார்க்சிய தத்துவங்களை போதித்தனர். வாடிப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த எமது பயிற்சி முகாமில் தோழர் தமிழரசன் மற்றும் அவரது தோழர்களுக்கு தோழர் நெப்போலியனே ஆயுதப் பயிற்சி வழங்கினார். பயிற்சி வழங்கியது மட்டுமன்றி தோழர் தமிழரசனுக்கு ஆயுதங்களும் கொடுத்து உதவினார் தோழர் நெப்போலியன். இதனை அறிந்துகொண்ட இந்திய உளவு அமைப்பு ஈரோஸ் இயக்கத்தின் மூலம் மலையகத்தில் வைத்து தோழர் நெப்போலியனைக் கொன்றது. தோழர் நெப்போலியன் மலையகம் சென்று மலையக மக்களுக்காக மலையக மக்கள் விடுதலை முன்னணி(ULO) என்ற அமைப்பை உருவாக்கி போராடியிருந்தார். யாழ்ப்பாணத்தவர்கள் மலையக மக்கள் பற்றி அக்கறை கொள்வதில்லை என்று இன்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையக மக்களுக்காக போராடி மடிந்த தோழர் நெப்போலியனை பதிலாக கூற விரும்புகிறேன். செப் -1 தோழர் தமிழரசன் நினைவு தினம்

தோழர் தமிழரசனும் தோழர் ராயுவும்

• தோழர் தமிழரசனும் தோழர் ராயுவும் தாக்குதல்களில் உதவி பெறுவதற்காகவும் குறிப்பாக வாகனங்கள் ஓட்டுவதற்காகவும் எமது தோழர் ராயுவை தன்னுடன் அழைத்துச் சென்றார் தோழர் தமிழரசன். தோழர் ராயு கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்தவர். அவருக்கு எமது அமைப்பில் பெயர் ராயு. ஆனால் தோழர் தமிழரசன் தன்னுடன் அழைத்துச் சென்றபோது அவருக்கு வைத்த பெயர் தினேஸ். தோழர் தமிழரசன் மேற்கொண்ட மருதையாற்று பால வெடி குண்டு தாக்குதலில் பெரும் பங்கு வகித்தவர் இந்த தினேஸ். அதுமட்டுமன்றி காவிரி அணையை தகர்க்க வேண்டும் என்ற தோழர் தமிழரசன் விருப்பத்திற்கு உரிய திட்டங்களை வகுத்தக் கொடுத்தவரும் இந்த தினேஸ்தான். அடுத்து உட்கோட்டையில் தோழர் தமிழரசன் வங்கியில் பணப் பறிப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது வாகனத்தை ஓட்டிச் சென்றவர் தினேஸ். அச் சம்பவத்தில் தோழர் தமிழரசன் குழுவினரை மக்கள் சுற்றிவளைத்தபோது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும் கிரினைட் குண்டை வெடிக்க வைத்தும் மக்களை பின்வாங்க வைத்து தோழர் தமிழரசனை காப்பாற்றியவர் தினேஸ். அதன் பின்னர் பொன்பரப்பி வங்கியில் பணப் பறிப்பு செய்ய சயிக்கிளில் செல்வது என தோழர் தமிழரசன் தீர்மானித்தபோது வேண்டாம். அது ஆபத்தானது என தினேஸ் தடுத்தார். ஆனால் தோழர் தர்மலிங்கம் “ ஈழத்தில் நீங்கள் சயிக்கிளில் சென்று பணப் பறிப்பு செய்கிறீர்கள். இங்கு எம்மால் செய்ய முடியாதா?” எனக் கேட்டு சயிக்கிளில் செல்ல வேண்டும் என தோழர் தமிழரசனிடம் வற்புறுத்தினார். தோழர் தர்மலிங்கத்தின் பேச்சைக் கேட்டு பணப்பறிப்பு நடவடிக்கைக்கு சயிக்கிளில் செல்வது என்று தோழர் தமிழரசன் முடிவெடுத்தார். அத்துடன் சயிக்கிளில் செல்வதால் தினேஸ் தம்முடன் கூட வரத்தேவையில்லை என்றும் தோழர் தமிழரசன் கூறினார். தோழர் தமிழரசனின் இந்த முடிவு உளவுப்படையினருக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. தினேஸ் கூறியபடி காரில் சென்றிருந்தால் உட்கோட்டையில் காப்பாற்றியதுபோல் பொன்பரப்பியிலும் தோழர் தமிழரசனை நிச்சயம் தினேஸ் காப்பாற்றியிருப்பார். செப் -1 தோழர் தமிழரசன் நினைவு தினம்

இலங்கையில் அம்பாந்தோட்டையில்

இலங்கையில் அம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்சா கும்பலுடன் சேர்ந்து இவர் செய்திருக்கும் 30000கோடி ரூபா முதலீடும் விசாரணை செய்யப்பட வேண்டும்.

மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!

• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்! • மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்! • மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்! தோழர்மாஓ சேதுங் சிந்தனையை கற்றுத் தந்த தோழர் தமிழரசன்! 1984ல் தமிழ்நாட்டில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார். அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் எமது சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அவர்களது இடத்திற்கு அழைத்து சென்றார். உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தோழர் தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள். மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார். எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது. அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. இன்னொரு புறத்தில் பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர். இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார். மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்துக் கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர். பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை. இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர். இம்முறை தோழர் தமிழரசன் கூறுமுன்னரே எமது தோழர்கள் “மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள். என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள். உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள். இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார். குறிப்பு- செப்-1 திகதி தோழர் தமிழரசன் நினைவு தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள் பதிவு ஆகும்

என் வீட்டில் திருடன்

என் வீட்டில் திருடன் வந்து திருடினான். நான் “திருடன்” “திருடன்” என்று கத்தினேன். உடனே பொலிசார் என்னை கைது செய்தார்கள். நான் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது ஒரு கவிஞரின் கவிதை வரிகள். ஆனால் இதே போன்ற சம்பவங்கள் உண்மையாகவே எம் நிலத்தில் நடக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2500 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதுவரை அவர்களுக்கு எந்த அரசும் பதில் வழங்கவில்லை. நீதி வழங்கவில்லை. ஆனால் அவர்களின் அடையாள நிகழ்வில் பங்குபற்றியவர்களை கைது செய்து மிரட்டுகின்றனர். திருமலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிகழ்வில் பங்குபற்றிய ராஜீவ்காந்த் என்பவரை கைது செய்துள்ளனர். இதற்கு முன்னரும் இவர் கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வதன் மூலம் மக்கள் போராட்டங்களை அடக்க முனைகிறது சிங்கள அரசு.

ஒரு பெண் நினைத்தால்

ஒரு பெண் நினைத்தால் சென்னையில் கார்ப் பந்தயம் வைக்கவும் முடியும். 😂😂