Sunday, April 30, 2017

•51 வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்!

•51 வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்!
•எளிமையான ஜனாதிபதிக்கு 60 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம்
•எதிர்க்கட்சி தலைவருக்கு 5 கோடி ரூபாவுக்கு சொகுசு பங்களாவும் வாகனமும்
•மக்களுக்கு துரோகம் செய்யும் தலைவருக்கு “வாழும் வீரர்” பட்டம்!!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியாவில் 51வது தொடருகிறது.
இதுவரை நல்லாட்சி அரசும் இவர்களை கவனிக்கவில்லை. நல்லாட்சி அரசுடன் நல்லிணக்கம் பேணும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் கவனிக்கவில்லை.
தமிழ் மக்களின் வாக்கில் ஜனாதிபதியான மைத்திரி சிறிசேனா தமிழ் மக்களின் நலன்களை கவனிப்பதில்லை.
இந்த எளிமையான ஜனாதிபதி தனக்கு 60 கோடி ரூபா செலவில் இரண்டு சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்வதிலேயே கவனம் செலுத்துகிறார்.
ஏற்கனவே அவருக்கு பாதுக்காப்பிற்கு என பல குண்டு துளைக்காத வாகனங்கள் இருக்கும்பொழுது மக்கள் கஸ்டத்திற்கு மத்தியிலும் இந்த எளிமையான ஜனாதிபதி வாகனம் இறக்குமதி செய்கிறார்.
பிரதமர் ரணில் நாட்டில் இருப்பதேயில்லை. எப்போதும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார். மக்களின் பிரச்சனைகளை கேட்பதற்கு அவருக்கு அக்கறையே இல்லை.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்று உறுதிமொழி வழங்கிய சம்பந்தர் அய்யா உறுதி மொழியை காப்பாற்றவும் இல்லை. போராடும் மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லவும் அவரால் முடியவில்லை.
சம்பந்தர் அய்யாவின் கவனம் எல்லாம் தனக்கு பதவி பெற்றது மட்டுமன்றி சொகுசு பங்களாவும் சொகுசு வாகனமும் வாங்க 5 கோடி ரூபாவுக்கு பாராளுமன்றத்தில் பிரோரணை கொண்டு வருவதிலேயே இருக்கிறார்.
ஏற்கனவே அவருக்கு அரசு பங்களா வழங்கியுள்ளது. தற்போது மேலதிகமாக இன்னொரு பங்களாவும் வாகனமும் வழங்கவென 5 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வாக்கு போட்ட மக்கள் தமது பிரச்சனைகளுக்காக 51வது நாளாக போராடுகின்றார்கள். ஆனால் பதவி பெற்ற தலைவர்கள் தமக்கு பங்களாவும் சொகுசு வாகனமும் பெறுவதில் கவனம் செலுத்துகின்றார்கள்.
இத்தகைய ஈனத் தலைவர்களுக்கு “வாழும் வீரர்” “இறைமொழிச் செம்மல்” என பட்டங்கள் வேறு வழங்குகின்றார்கள் நம்மில் சிலர்.
என்னே கொடுமை இது? இந்த போராடும் மக்கள் தமிழ் இனத்தில் பிறந்ததைத் தவிர வேறு என்ன தவறு செய்துவிட்டார்கள்?

No comments:

Post a Comment