Sunday, April 30, 2017

இலங்கை அரசே! தோழர் தேவதாசனை உடனே விடுதலை செய்!

இலங்கை அரசே!
தோழர் தேவதாசனை உடனே விடுதலை செய்!
நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும, சமூக விடுதலையில் அக்கறை கொண்டவருமான தோழர் தேவதாசன் அவர்களை உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புலிகளுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் 2008ல் தேவதாசன் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு 20 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புலிகளின் தளபதியாக இருந்த கருணா தண்டிக்கப்படவில்லை.
புலிகளுக்டகு ஆயுதம் வாங்கி கொடுத்த கே.பி தண்டிக்கப்படவில்லை.
ஆனால் புலிகளுக்கு அடைக்கலம் வழங்கினார் என்று தேவதாசனுக்கு 20 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தளபதிகளுக்கு விடுதலை. ஆதரவு கொடுத்தவர்களுக்கு தண்டனை. இதுதான் அரசின் புனர்வாழ்வு கொள்கையா? அல்லது இதுதான் நல்லாட்சி அரசின் நல்லிணக்கமா?
தோழர் தேவதாசன் அவர்கள் தன்மீதான வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு கோரி பல முறை உண்ணாவிரதம் நிகழ்த்தியுள்ளார்.
தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஒத்துக்கொள்ள இவர் முன்வந்தபோதும்கூட அரசு வேண்டுமென்றே இவரது வழக்கை விசாரணை செய்யாமல் இதுவரை இழுத்தடித்து வந்தது.
உண்மையில் தோழர் தேவதாசனுக்கு வழங்கப்ட்டுள்ள தண்டனை என்பது அவரது குற்றத்திற்காக வழங்கப்டவில்லை. மாறாக அவர் கொண்டுள்ள இடதுசாரி அரசியலுக்காகவே தண்டிக்கப்பட்டுள்ளார்.
1979களில் வாசுதேவநாணயக்காரவை கரவெட்டிக்கு அழைத்து வந்து கருத்தரங்கு நடத்தியவர். ஆனால் இப்போது வாசுதேவா இவரின் விடுதலைக்கு குரல் கொடுக்காமல் இருக்கிறார்.
தேவதாசனுக்கு இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபன தலைவர் பதவியை பெற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி யினர். அவர்களின் தமிழ் உறுப்பினர் சந்திரசேகர் இவரின் நெருங்கிய நணபர். அவர் கூட ஏன் மௌனமாக இருக்கிறார் என்று புரியவில்லை.
புதிய ஜனநாயக்கட்சி மற்றும் சிறீதுங்காவின் சோசலிசக் கட்சிகளின் சார்பாக வடபகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர் தேவதாசன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தளவு பிரபல்யம் மிக்க ஒருவருக்கே இந்த கதி என்றால் பிரபல்யம் அற்ற அப்பாவிகளின் கதி என்ன?
தன்னைக் கொல்ல வந்தவரையே மன்னித்து விடுதலை செய்தவர் என்று பெயர் வாங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தேவதாசனை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
தண்டனை பெற்றவர்களையே ஜனாபதி மன்னித்து விடுதலை செய்ய முடியும். வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை என்று இதுவரை கூறினார்கள்.
அப்படியென்றால் தற்போது தேவதாசன் தண்டனை பெற்ற கைதியாகவே உள்ளார். அவரை உடனே மன்னித்து விடுதலை செய்ய ஜனாதிபதி முன்வருவாரா?
குற்றம் பரிந்த ராணுவம் இன்னும் தண்டிக்கப்படவில்லை. ராணுவத்தை தண்டிக்கமாட்டோம் என்று இலங்கை அரசு கூறிவரும் நிலையிலும் அதுக்கு மேலும் 2 வருட அவகாசம் ஜ.நா வழங்குகிறது.
ஆனால் தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் மீது வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.
இது என்ன நியாயம் என்று கேட்டால் இதுதான் நல்லிணக்கம் என்று சம்பந்தர் அய்யா கூறுகிறார். இதுதான் நல்லாட்சி என்று சுமந்திரன் சொல்கிறார்.
தோழர் தேவதாசன் உட்பட அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் குரல் கொடுப்போம்!

No comments:

Post a Comment