Sunday, April 30, 2017

•தவளை வாயில் இருந்து தப்ப நினைத்து முதலை வாயில் அகப்பட்ட தமிழ் இனம்!

•தவளை வாயில் இருந்து தப்ப நினைத்து
முதலை வாயில் அகப்பட்ட தமிழ் இனம்!
தவளை வாயில் இருந்து தப்ப நினைத்து முதலை வாயில் அகப்பட்டது போன்று, இலங்கை அரசிடமிருந்து விடுதலைபெற போராடிய தமிழ் இனம் இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளது.
இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் பயன் பெறவில்லை. தமிழரும் பயன்பெறவில்லை. பயன்பெற்றது இந்திய அரசு மட்டுமே.
தற்போது,
பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு கொடுத்தாயிற்று
காங்கேசன் துறைமுகம் இந்தியாவுக்கு கொடுத்தாயிற்று
காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை இந்தியாவுக்கு கொடுத்தாயிற்று
மன்னார் எண்ணெய் வளம் இந்தியாவுக்கு கொடுத்தாயிற்று
புல்மோட்டை இல்மனைற் இந்தியாவுக்கு கொடுத்தாயிற்று
சம்புரில் அனல்மின் நிலையம் இந்தியாவுக்கு கொடுத்தாயிற்று
சம்பூரில் 650 ஏக்கர் நிலம் இந்தியாவுக்கு கொடுத்தாயிற்று
திருமலை எண்ணெய் குதம் இந்தியாவுக்கு கொடுத்தாயிற்று
திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு கொடுத்தாயிற்று
மிஞ்சியிருப்பது தமிழன் கோமணம் மட்டுமே
அதையும் எட்கா ஒப்பந்தம் மூலம் பறிக்க இந்தியா முனைகிறது.
இத்தனை அழிவிற்கு பின்னரும் இத்தனை அழிவுக்கும் காரணமான இந்தியா ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்று தரும் என்று கூறும் தலைவர்களை என்னவென்று அழைப்பது?
அடுத்த மாதம் 12ம் திகதி மோடி வருகிறாராம். தீர்வு தரப் போகிறார் என்று ஒரு கும்பல் வழக்கம்போல் கூவத் தொடங்கியுள்ளது.
கூலிக்கு மாரடிக்கும் இந்த துரோகக் கும்பல்களை விரட்டியடிக்காதவரை இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து தமிழ் இனம் விடுதலை பெறமுடியாது.

No comments:

Post a Comment