Sunday, April 30, 2017

•தமிழக காவல்துறை மக்களின் நண்பன் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது!

•தமிழக காவல்துறை மக்களின் நண்பன் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது!
தமிழக காவல்துறையானது தமிழக அரசின் ஏவல்நாய் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.
அது தனது வீரத்தை அப்பாவி மக்கள்மீது காட்டி வருகிறது. அதுபுரியாமல் காவல்துறை மக்களின் நண்பன் என்று சிலர் நம்பி வருகின்றனர்.
தமிழக காவல்துறையானது,
தமிழக மீனவன் பிரிட்டோ இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டபோது காட்டாத வீரத்தை
தமிழக லாரி டிறைவர் கர்நாடகாவில் நிர்வாணமாக்கி தாக்கப்ட்டபோது காட்டாத வீரத்தை
தமிழக வியாபாரி கேரளாவில் சுடுநீர் ஊற்றி கொல்லப்பட்டபோது காட்டாத வீரத்தை
தமிழக கூலித் தொழிலாளர்களை மரம் கடத்தினார்கள் என்று பொய்கூறி ஆந்திராவில் சுட்டுக்கொன்றபோது காட்டாத வீரத்தை
மதுக்கடைக்கு எதிராக போராடும் தமிழக பெண்களுக்கு எதிராக காட்டுகிறார்கள்.
நேற்று ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அமைதி வழியில் போராடிய மாணவர்களையும் பெண்களையும் தாக்கினார்கள்.
இன்று மதுக்கடைக்கு எதிராக போராடும் அப்பாவி பெண்களை தாக்குகிறார்கள்.
நாளை இதேபோல் தமிழ் மக்களையே இந்த காவல்துறை தாக்கப் போகிறது.
இடையிடையே சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருக்கும் அப்பாவி அகதிகளையும் தாக்கி தனது வீரத்தை வெளிப்படுத்தி வருகிறது தமிழக காவல்துறை.
தமிழ் மக்களை தாக்கும் இந்த ஏவல்துறை ஒருபோதும் தமிழ் மக்களின் நண்பன் கிடையாது என்பதை இனியாவது தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment