Sunday, April 30, 2017

•“எட்கா” ஒப்பந்தம் செய்ய துடிக்கும் பிரதமர்களுக்கு தமிழ் அகதிகள் குறித்து பேச அக்கறை இல்லை!

•“எட்கா” ஒப்பந்தம் செய்ய துடிக்கும் பிரதமர்களுக்கு
தமிழ் அகதிகள் குறித்து பேச அக்கறை இல்லை!
இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவதற்கு முன்னர் எட்கா ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக பிரதமர் ரணில் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
எட்கா ஒப்பந்தத்திற்கு இலங்கை மக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பை மீறி ஒப்பந்தம் செய்வதற்கு பிரதமர் ரணில் முயற்சி செய்கிறார்.
ரணில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது இந்த எட்கா ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தார். தான் ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தத்தை செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் அவர் தான் கூறியதற்கு மாறாக தற்போது அந்த எட்கா ஒப்பந்தத்தை மக்கள் விருப்பத்திற்கு எதிராக நிறைவேற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.
அத்துடன் இந்திய பிரதமர் மோடி “எட்கா” ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இலங்கை மீது கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்.
இதேவேளை பொள்ளாச்சி அகதி முகாமில் இருந்து 2 தமிழ் அகதிகள் இலங்கைக்கு தப்பியதாகவும் தப்ப முயன்ற மேலும் 5 தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் அகதிகள் 33 வருடமாக தமிழ்நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை. அவர்கள் கல்லூரியில்கூட படிப்பதற்கு அனுமதி இல்லை.
எனவே தமிழ்நாட்டில் வாழ முடியாத அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புகின்றனர். ஆனால் அதற்கும் இந்திய அரசு அவர்களை அனுமதிப்பதில்லை.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தமிழ் அகதிகளை வாழ வைக்கவில்லை என்பது மட்டுமல்ல அவர்கள் திரும்பிச் செல்லவும் விடாமல் வதைக்கிறது.
இந்தக் கொடுமைகள் குறித்து குரல் கொடுக்க வேண்டிய தமிழ் தலைவர்களோ மௌனமாக இருக்கின்றனர்.
இந்திய பிரதமரும் இலங்கை பிரதமரும் எட்கா ஒப்பந்தம் செய்வதற்கு முயற்சி செய்கின்றனர். அதற்காக பல தடவைகள் சந்தித்து பேசுகின்றனர்.
ஆனால் 33 வருடமாக அகதியாக வாழும் 2 லட்சம் தமிழ் அகதிகள் குறித்து இந்த பிரதமர்களால் ஒருமுறைகூட பேச அக்கறை கொள்ளவில்லை.

No comments:

Post a Comment