Sunday, April 30, 2017

•மோடிஜி யின் சுத்துமாத்து!

•மோடிஜி யின் சுத்துமாத்து!
தான் பதவிக்கு வந்தால் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபா வைப்பில் இடப்படும் என மோடிஜி கூறியிருந்தார்.
அவர் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டது. இன்னும் அவர் கூறிய கறுப்பு பணம் மீட்கப்படவும் இல்லை. 15 லட்சம் ரூபாவும் வைப்பில் இடப்படவும் இல்லை.
இப்போது, 2022ல் அனைவருக்கும் சொந்த வீடு கட்டி தரப்படும் என மோடிஜி உறுதியளித்துள்ளார்.
இங்கு எமது கேள்வி என்னவெனில், 15லட்சம் ரூபா தரப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மோடிஜி அனைவருக்கும் வீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று எப்படி நம்புவது?
55 நாட்களாக போராடும் விவசாயிகளை சந்திக்கவே மறுக்கும் மோடிஜி,
அவர்களின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடிஜி,
அவர்களுக்கும் வீடு கட்டி தரப்போகிறார் என்பதை எப்படி நம்புவது?
இது மக்களை ஏமாற்றும் மோடிஜியின் சுத்துமாத்து அன்றி வேறு என்ன?
குறிப்பு- அடுத்த மாதம் மோடிஜி இலங்கை வருகிறாராம். “எட்கா” ஒப்பந்தம் செய்வதற்காக என்ன சுத்துமாத்து செய்யப்போகிறாரோ?

No comments:

Post a Comment