Sunday, April 30, 2017

•முழு அடைப்பிற்கு ஆதரவு வழங்குவோம்!

•முழு அடைப்பிற்கு ஆதரவு வழங்குவோம்!
தமிழக விவசாயிகளுக்காக இன்று நடைபெறும் முழு அடைப்பிற்கு தமிழக மக்கள் அனைவரும் முழு ஆதரவு வழங்க வேண்டும்.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
உ.பி அரசு 2 கோடி விவசாயிகளின் 36353கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. உபி அரசால் முடியுமாயின் தமிழ்நாடு அரசால் ஏன் முடியாது?
விவசாயிகளின் கடன் தொகையைவிட முழு அடைப்பினால் அரசுக்கு எற்படும் இழப்பு அதிகம்.
அரசுக்கு எந்தளவு இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஆனால் விவசாயிகளுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது என்ற பிடிவாதத்துடன் அரசு செயற்படுகிறது.
ஒருநாள் முழு அடைப்புடன் போராட்டத்தை நிறுத்திவிடக்கூடாது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட வேண்டும்.
அரசுக்கு வலிக்காத போராட்டங்களை கைவிட்டு, அரசுக்கு நெருக்கடி தரும் போராட்ட வடிவங்களை மேற்கொள்ள வேண்டும்.
லட்சணக் கணக்கில் விவசாயிகளையும் மக்களையும் திரட்டி அரசு செயற்படமுடியாதவாறு ஸ்தம்பிக்க வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment